அடங்க மறு... !( முழு நாவல் (கண்மணி 23.07.25)

அடங்க மறு...! (முழு நாவல்) (கண்மணி 23.07.25) நாவல் சுருக்கம் ச மையலரும் சரக்கு மாஸ்டருமான, சுந்தரம் - பருவதம் தம்பதியரின் ஒரே மகள் சாவித்திரி. பள்ளி இறுதிப் பொதுத் தேர்வில், மேலதிகமான மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் சாதித்ததற்காக, மாவட்ட ஆட்சியரின் கைகளால் பரிசுகள் பெற்றாள் சாவித்தி. திடீரென மாரடைப்பால் சாவித்திரியின் தந்தை சுந்தரம் இறந்துவிட, தந்தையை இழந்த சாவித்திரியின், வாழ்வின் போக்கே மாற்றமடைகிறது. அவளுக்குள் கனன்றுக் கொண்டிருந்த மேற்படிப்புக் கனவுகளுக்கு முன் பிரும்மாண்டமான கேள்ளிக்குறி எழுந்து நிற்க, தன் பெற்றோரைப் போலவே கேட்டரிங் தொழிலில் ஈடுபடுட முடிவு செய்கிறாள் சாவித்திரி. அதற்குத் தன்னை தயார் செய்து கொள்ள, கேட்டரிங் கல்லூரியில் சேரவும் முடிவு செய்கிறாள். கேட்டரிங் கல்லூரி நிர்வாகம் நிர்ணயித்த விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 500 தேவைப்பட சரக்கு மாஸ்டர் என்று பிரபலமாக வலம் வந்த சாவித்திரியின் தாய் பருவதம் கல்யாண பந்தியில் எச்சில...