Posts

177. ஆண்மை தவறேல் (தேன்சிட்டு தீபாவளி மலர் 2025)

Image
  177. ஆண்மை தவறேல் (தேன்சிட்டு தீபாவளி மலர் 2025)         செ ன்னை விமான நிலையம். வரவேற்பு வளாகக் காத்திருப்போர் கூட்டத்தில் பாண்டியனும் நின்றிருந்தான். அவன் கையில் கண்ணைக் கவரும் வண்ணத்தில் ‘பூங்குன்றன்’ என்று எழுதப்பட்ட வரவேற்பு அட்டை பளபளத்தது. சிறிய முதுகுப் பை மட்டுமே இருந்ததால், விமான நிலையச் சோதனைச் சரகத்தில் நுழைந்து, வெகு விரைவில் வெளியே வந்துவிட்டான்.   முகத்தில் செயற்கை மலச்சியோடு, பூங்குன்றனை உதட்டால் வாழ்த்தி, தொன் மரபாய் அணைத்து,   வாகன நிறுத்தத்திற்கு அழைத்துச் சென்றான் பாண்டியன். குளிரூட்டப்பட்ட உயர்தரமான காரை நெருங்கினர் இருவரும். “நான் ஓட்டட்டுமா காரை ?” இயல்பாய்க் கேட்டான் பூங்குன்றன். “வேண்டாம் வேண்டாம். நீ தொழிலதிபர்.   உனக்குக் காரோட்டி நான்..” என்றான் பாண்டியன், முகத்தில் செயற்கையான முறுவலைப் பூசிக்கொண்டு. “காரோட்டி என்றெல்லாம் சொல்லாதே. நீ என் உயிர் நண்பன்.” உண்மையான முறுவலோடு சொன்னான் பூங்குன்றன். அ ந்தப் பெரிய நட்சத்திர விடுதியின் முன் மோட்டாரை நிறுத்தினான் பாண்டியன். “எதற்கு விடுதி? நேராக இல்லத்திற்கே ப...

அடங்க மறு... !( முழு நாவல் (கண்மணி 23.07.25)

Image
                                      அடங்க மறு...! (முழு நாவல்) (கண்மணி 23.07.25) நாவல் சுருக்கம் ச மையலரும் சரக்கு மாஸ்டருமான, சுந்தரம் - பருவதம் தம்பதியரின் ஒரே மகள் சாவித்திரி. பள்ளி இறுதிப் பொதுத் தேர்வில், மேலதிகமான மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் சாதித்ததற்காக, மாவட்ட ஆட்சியரின் கைகளால் பரிசுகள் பெற்றாள் சாவித்தி. திடீரென மாரடைப்பால் சாவித்திரியின் தந்தை சுந்தரம் இறந்துவிட, தந்தையை இழந்த சாவித்திரியின், வாழ்வின் போக்கே மாற்றமடைகிறது. அவளுக்குள் கனன்றுக் கொண்டிருந்த மேற்படிப்புக் கனவுகளுக்கு முன் பிரும்மாண்டமான கேள்ளிக்குறி எழுந்து நிற்க,   தன் பெற்றோரைப் போலவே கேட்டரிங் தொழிலில் ஈடுபடுட முடிவு செய்கிறாள் சாவித்திரி. அதற்குத் தன்னை தயார் செய்து கொள்ள, கேட்டரிங் கல்லூரியில் சேரவும் முடிவு செய்கிறாள். கேட்டரிங் கல்லூரி நிர்வாகம் நிர்ணயித்த விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 500 தேவைப்பட சரக்கு மாஸ்டர் என்று பிரபலமாக வலம் வந்த சாவித்திரியின் தாய் பருவதம் கல்யாண பந்தியில் எச்சில...

176. பெத்த வயிறு (தினமணி கதிர் 29.06.25)

Image
      பெத்த வயிறு        தினமணி கதிர் 29.06.25 "ஏ லேய் ரா......கு......லூ....."  ஆள்காட்டி விரல்கள் மூக்கு முனையின் இருபுறமும் தொட்டிருக்க, கட்டைவிரல்கள் கன்னங்களில் தாங்கியிருக்க, வாய் முன் புனல் போல் கைகளைக் குவித்தபடி, தன் குடிசை வாசலில் இருந்து சத்தமாக தன் மகனை அழைத்தாள் சாவித்திரி. அறிவியல் தொழில் நுட்பங்களின் குறுக்கீடே இல்லாத அந்தப் பின் தங்கிய கிராமத்தில், பத்துப் பனிரெண்டு ஓலைக் குடிசைகளுக்கு அப்பால், வேலியோரமாய் இங்கும் அங்குமாய் கண்களையும் கால்களையும் உலவ விட்டு, பொன்வண்டோ, தட்டானா, தேரையோ, தவளையோ, ஓணானோ, அரணையோ, சாரையோ, சர்ப்பமோ, நாயோ பூனையோ அல்லது வேறு எதையோ பராக்குப் பார்த்தபடி, பொழுது போக்கிக் கொண்டு நின்ற ராகுலின் காதுகளில் அம்மாவின் குரல் இறங்கியது.   "ஊரு ஒலகத்துல, இவன் வயசுப் பயலுவ எப்படியெல்லாம் சூட்டிகையா இருக்கானுங்க, வெட்டிக்கிட்டு வான்னா, கட்டிக்கிட்டு வந்து நிக்கறானுவ; நாம பெத்தது, இப்பிடி ஒரு சுதாரிப்பும் இல்லாம மச மச ன்னு இருக்கானே..!; ம்...! நமக்குக் கொடுப்பினை இவ்ளோதான் போல; நாம வாங்கிக்கிட்டு வந்த வ...