Posts

Showing posts from December, 2023

138. மினிமலிசம் (கிறிஸ்துமஸ் சிறப்புச் சிறுகதை)

Image
                                  மினிமலிசம்                        (கிறிஸ்துமஸ் சிறப்புச் சிறுகதை)                                                                  - ஜூனியர்தேஜ் விகடன் (25.12.2023) ப டகுப் போன்ற கார் அந்த குடிசையின் வாயிலில் நின்றது. வாசல் திண்ணையில் அமர்ந்து, சிம்புகளை சீவுவதும், கொடிகளை ஒட்டுவதும், களிமண்ணால் பொம்மைகளை வனைவதும், அதற்கு ஆடை அலங்காரங்கள் செய்வதுமாய் ஈடுபாட்டுடன் கிறித்துமஸ்க்காக அலங்காரங்கள் செய்ய ஆயத்தம் செய்து கொண்டிருந்த சூசை, கை வேலைகளை அப்படியேப் போட்டுவிட்டு உள்ளே ஓடினான். முதலாளியய்யா கார் வந்து நிக்குதும்மா.. என்று சூசை சொன்னதும், ஓட்டமும் நடையுமாக வெளியே வந்தாள் சூசையின் அம்மா மேரி. representational image கார் ஓட்டுநர் இருக்கைக்கு வெளியே தலை குனிந்து முதலாளியய்யாவைப் பார்த்தபடி நின்றாள். கா ரின் கண்ணாடிக் கதவு ‘ஹூம்ம்ம்ம்ம்ம்’ என காருக்குள் மெல்லிய ஹூம்கார ஓசையை எழுப்பியபடி பாதி இறங்கி நின்றது. காருக்குள் உற்பத்தியான ஏசி குளிர், அதிகமாக வெளியே போய்விடக்கூடாது என்பதில் முனைப்பாக இருந்தார், கார் ஓட்டி இருக்கையில் அமர்ந்திருந்த கோடீஸ்வரர் இம்மான

137. முதல் நிகழ்ச்சி மேடம்...(குணசீலத்துக் கதை – 6)

Image
  137. முதல் நிகழ்ச்சி மேடம்... (குணசீலத்துக் கதை – 6) ( superiarity complex) - ஜூனியர் தேஜ் திறத்துக்கேத் துப்புறவாம் திருமாலின் சீர் '. என்ற நம்மாழ்வார் வாக்குப்படி , குணசீலம் பெருமாள் மனநலத்தைக் காக்கும் பெருமாள் என்பது பிரசித்தம் . அந்த வகையில் மனநலம் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்கள் பற்றிய நிகழ்வுகளை ஊர் , பெயர் எல்லாம் மாற்றி , கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது . வாசகர்களுக்குக் கட்டுரையாய்ச் சொல்வதை விடக், கதாபாத்திரங்கள் மூலம் , மனநல பாதிப்புகளையும் , அதனை எப்படிச் சரி செய்து கொள்ளலாம் என்ற விழிப்புணர்வையும் ஊட்டுவதே இந்தக் குணசீலத்துக் கதைகளின் நோக்கம் . అఅఅఅఅఅఅఅఅ " ச ப் எடிட்டர் சனாவிடமிருந்து அழைப்பு என்றதுமே, மனதில் கிலேசம் படர்ந்தது ஐஸ்வர்யாவுக்கு. “ ஹலோ...! சொல்லுங்க மேடம்...! ” - என்று வழக்கமாக. உயர் அதிகாரிகளிடம் சொல்லும் ஐஸ்வர்யா, “ஹலோ... ” என்பதுடன் நிறுத்திக் கொண்டாள். ‘ஊருக்கு ஊர் தன் கூடவே அழைத்துப்போய், இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசத்தின் அனைத்து சூட்சுமங்களையும் கற்றுக் கொடுத்து அவள் திறமையை வளர்த்துவிட்டதோ