128. காதல் நோய் (குணசீலத்துக் கதை - 4)
128. காதல் நோய் (சிறுகதை) - ஜூனியர் தேஜ் குணசீலத்துக் கதை 4 தி றத்துக்கேத் துப்புறவாம் திருமாலின் சீர் '. என்ற நம்மாவாழ்வார் வாக்குப்படி குணசீலம் பெருமாள் மனநலத்தைக் காக்கும் பெருமாள் என்பது பிரசித்தம் . அந்த வகையில் மனநலம் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்கள் பற்றிய நிகழ்வுகளை ஊர் , பெயர் எல்லாம் மாற்றி , கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது . வாசகர்களுக்குக் கட்டுரையாய் சொல்வதை விட கதாபாத்திரங்கள் மூலம் , மனநல பாதிப்புகளையும் , அதனை எப்படிச் சரி செய்து கொள்ளலாம் என்ற விழிப்புணர்வையும் ஊட்டுவதே இந்தக் குணசீலத்துக் கதைகளின் நோக்கம் . అఅఅ అఅఅ అఅఅ అఅఅ “க வுன்சலிங் சென்டர் வரவேற்பில் அமர்ந்திருந்த மயூரி அர்த்தமேயில்லாமல் சிரித்துக்கொண்டிருந்தாள். பொது இடங்கள்ல, அர்த்தமில்லாம தனக்குத்தானே சிரிக்கறது, சம்பந்தாசம்பந்தமில்லாமப் பேசுறது, பாட்டுப் பாடுறது; துணியைக் கிழிச்சிக்கிட்டுத் தெருவுல அலையுறது; குப்பையக் கிளறிக் கிளறிப் பொறுக்குறது; இளிச்சியிளிச்சிக்கிட்டு நட்டநடுத் தெருவ