Posts

Showing posts from August, 2022

கலியன் மதவு (அத்தியாயம் 16)

Image
  கலியன் மதவு (சமூக நாவல்) - ஜூனியர் தேஜ் அத்தியாயம் – 16 ஆனந்த விகடன் -  23   - 08 . 2022 “ சா ஸ்திரிகளே... சாஸ்த்திரம் படிச்ச நீர் , பேச்சு மாறலாமா ...?” இந்தச் சூழ்நிலையில் குந்தலாம்பாளிடம் இப்படி ஒரு ரௌத்ரத்தை எதிர் பார்க்காத ஊரார் அதிர்ந்தார்கள். ‘என்னச் சேதி ...?’ ‘ என்னப் பிரச்சனை...? ’ ‘ என்ன நடக்குது இங்கே ...? ’ பரபரப்பும் , கேள்வியும் , அச்சமும் , ஆர்வமும் எல்லார் முகத்திலும், அப்பியிருந்தது... “முத்தனூர் வழியா வாகனம் போகப் போறதாப் பேச்சு அடிப்பட்டுதே...?” ‘ தலைக்கு மேலேப் போனபிறகுச் சாண் என்ன ...? முழம் என்ன ...?’ என்ற ரீதியில் கனமாய் வந்தது குந்தலாம்பாளின் குரல் . “ஆமாம் மாமி... ! அதுதானே நம்ம ஊர் வழக்கம்... ! ” “ம்ஹூம் கூடாது... ! பக்கத்து ஊர்ப் பாதைக் கூடவேக் கூடாது... “………………………………” அதிர்ச்சியோடுப் பார்த்தார் சாஸ்திரிகள் . “ நீங்க வந்ததுமே , நான் உம்மகிட்டே உறுதியாச் சொல்லிட்டேன் . சொன்னப்போச் சரி ...! சரி ...!! ன்னுத் தலையைத் தலையைத் தலையை ஆட்டினேள் . இப்போ பேச்சு மாத்திப் பேசறேளே . இது உங்களுக்கேச் சரினு தோண்றதா ...? “……………