176. பெத்த வயிறு (தினமணி கதிர் 29.06.25)

பெத்த வயிறு தினமணி கதிர் 29.06.25 "ஏ லேய் ரா......கு......லூ....." ஆள்காட்டி விரல்கள் மூக்கு முனையின் இருபுறமும் தொட்டிருக்க, கட்டைவிரல்கள் கன்னங்களில் தாங்கியிருக்க, வாய் முன் புனல் போல் கைகளைக் குவித்தபடி, தன் குடிசை வாசலில் இருந்து சத்தமாக தன் மகனை அழைத்தாள் சாவித்திரி. அறிவியல் தொழில் நுட்பங்களின் குறுக்கீடே இல்லாத அந்தப் பின் தங்கிய கிராமத்தில், பத்துப் பனிரெண்டு ஓலைக் குடிசைகளுக்கு அப்பால், வேலியோரமாய் இங்கும் அங்குமாய் கண்களையும் கால்களையும் உலவ விட்டு, பொன்வண்டோ, தட்டானா, தேரையோ, தவளையோ, ஓணானோ, அரணையோ, சாரையோ, சர்ப்பமோ, நாயோ பூனையோ அல்லது வேறு எதையோ பராக்குப் பார்த்தபடி, பொழுது போக்கிக் கொண்டு நின்ற ராகுலின் காதுகளில் அம்மாவின் குரல் இறங்கியது. "ஊரு ஒலகத்துல, இவன் வயசுப் பயலுவ எப்படியெல்லாம் சூட்டிகையா இருக்கானுங்க, வெட்டிக்கிட்டு வான்னா, கட்டிக்கிட்டு வந்து நிக்கறானுவ; நாம பெத்தது, இப்பிடி ஒரு சுதாரிப்பும் இல்லாம மச மச ன்னு இருக்கானே..!; ம்...! நமக்குக் கொடுப்பினை இவ்ளோதான் போல; நாம வாங்கிக்கிட்டு வந்த வ...