சுதந்திர ஆளுமையும் சார்பு ஆளுமையும் (Independent Personality & Dependent Personality ஜூனியர் தேஜ் குணசீலத்துச் சிறுகதை விகடன் - 07.02.2024 ‘தி றத்துக்கேத் துப்புறவாம் திருமாலின் சீர்'. என்ற நம்மாழ்வார் வாக்குப்படி, குணசீலம் பெருமாள் மனநலத்தைக் காக்கும் பெருமாள் என்பது பிரசித்தம். அந்த வகையில் மனநலம் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்கள் பற்றிய நிகழ்வுகளை ஊர், பெயர் எல்லாம் மாற்றி, கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களுக்குக் கட்டுரையாய்ச் சொல்வதை விடக், கதாபாத்திரங்கள் மூலம், மனநல பாதிப்புகளையும், அதனை எப்படிச் சரி செய்து கொள்ளலாம் என்ற விழிப்புணர்வையும் ஊட்டுவதே இந்தக் குணசீலத்துக் கதைகளின் நோக்கம். 'மரியாதை நிமித்தம், வரவேற்புக்கோ, வழியனுப்பலுக்கோ, ரயில் நிலையம், பேருந்து நிறுத்தம் போன்ற இடங்களுக்கு, வருவதென்ற நடைமுறைகளையெல்லாம் அறவே விரும்பாதவர் சிவகாமிப்-பாட்டி. அதெல்லாம் நேர விரயம் வரட்டு ஜம்பம், என்பது பாட்டியின் கருத்து. வழக்கம்போல், சிவாகாமிப் பாட்டி, வாசல் திண்ணையில் பைகளை கொண்ட வந்து வைத்தாள். வீதியில் இறங்கினாள். தலைக்கு மேல் இரண்டு கைகளையும் தூக்கி