55. கவலை (ஒரு பக்கக் கதை)

கவலை (ஒபக)

                                      -ஜூனியர் தேஜ்

(ஏப்ரல் 1-15 2022) கதிர்ஸ்

ண்டீ வைஷ்ணவீ சோகமா இருக்கே...கேட்டாள் தோழி உரிமையுடன்.

வைஷ்ணவியின் கண்கள் கலங்கின.

சொல்லுடீ..! பிரச்சனையைச் சொன்னாத்தானே தீர்க்கலாம்..?.

என் புருஷன் விக்னேஷ் கோபிச்சிக்கிட்டு எங்கேயோ போயிட்டாருடீ...?”- கண்ணீர் பெருகியது.

கவலையை விடு..! என்ற தோழிஅரும்பாடு பட்டுதுப்பறிந்து நேரில் சந்தித்து விக்னேஷைச் சமாதானப் படுத்தி மீண்டும் வைஷ்ணவியோடு சேர்த்து வைத்தாள்.

றுநாள்

விக்னேஷ் போர்டிகோ ஊஞ்சலில் தூங்கிக் கொண்டிருந்தான்.

வீட்டினுள் சோகமே உருவெடுத்த நிலையில் வைஷ்ணவி.

“ பிரிஞ்சி போன புருஷன்தான் திரும்பி வந்தாச்சே இப்ப என்னடீ சோகம்..? .

"மீண்டும் சேரமுடியுமா'னு நேத்து கவலைப் பட்டேன்.! ஏதாவது பிரச்சனை வந்து மீண்டும் பிரியாம இருக்கணுமே'னு கவலையா இருக்குடி..!” என்றாள் வைஷ்ணவி முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டே.

**********************



Comments

  1. கவலைப்படுவதற்கென்றே சிலர் வாழ்க்கையை வாழ்வார்கள்! அதில் வைஷ்ணவி இந்த ரகம்!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மயூரி... என் உயிர் நீ... (கண்மணி 09.03.25) (முழு நீள நாவல்)

உலகளாவிய திறனாய்வுப் போட்டி 4 வது இடம்

அடங்க மறு... !( முழு நாவல் (கண்மணி 23.07.25)