24. மாமியார் மெச்சிய மருமகள் (ஒரு பக்கக் கதை)

24. மாமியார் மெச்சிய மருமகள்

                                     -ஜூனியர் தேஜ்

(ஆதிரை – 12 – 18 – 2021)

"தா மாதிரி மருமகளைப் பெற நான் கொடுத்து வச்சிருக்கணும் வேணி ." என்றாள் அகிலாண்டம்.

"அப்படியா! அவ்வளவு உயர்ந்த குணமா ஆன்ட்டி அவளுக்கு?" – போனில் வியந்தாள் வேணி

"சொன்னா நம்பமாட்டே! அவள் வந்ததிலிருந்து என் துணிகளைக்கூட என்னை துவைக்க விடாம, அவளேதான் துவைக்கறான்னா பாரேன். ஆனால் துவைத்த துணியை நான்தான் காயப் போடுவேன்…!"

"பரவாயில்லையே... ! இந்த காலத்துலயம் இப்படி ஒரு மருமகளா...?"

வியந்தாள் வேணி.

ந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்தாள் வேணி. அலுவலகம் விடுமுறை  என்பதால் லதா மட்டுமே வீட்டிலிருந்தாள்.

               "வாங்க…!  வாங்க...! உட்காருங்க...!

இன்முகத்துடன் வரவேற்றாள் லதா.

தொடர்ந்துஅத்தை கோவிலுக்கு போய் இருக்காங்க....! என்றாள்.

               " பரவாயில்லம்மா...! நான் பார்க்க வந்தது உன்னைத்தான்.  மாமியார் துணிகளையெல்லாம் நீ துவைச்சிப்போட்டு, மாமியார் மெச்சும் மருமகளா நீ இருக்கறதைக் கேள்விப்பட்டதும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு!" என்றாள் வேணி 

               எங்க அத்தை  துணி துவைச்சா  ஏகப்பட்ட சோப்பு, சர்ஃப், வேஸ்ட் பண்ணிடறாங்க;

தேவைக்கதிகமாத் தண்ணி யூஸ் பண்ணி; டாங்க்க காலிப் பண்ணிடறாங்க;

அதான் வேற வழியில்லாம நானே துவைச்சித் தொலைக்கறேன்...! 

கோயிலில் இருந்து திரும்பிய அகிலாண்டத்தின் காதுகளில் மருமகளின் பேச்சு விழ உறைந்து நின்றாள்.

అఅఅఅఅఅఅఅఅ


Comments

Popular posts from this blog

மயூரி... என் உயிர் நீ... (கண்மணி 09.03.25) (முழு நீள நாவல்)

உலகளாவிய திறனாய்வுப் போட்டி 4 வது இடம்

அடங்க மறு... !( முழு நாவல் (கண்மணி 23.07.25)