24. மாமியார் மெச்சிய மருமகள் (ஒரு பக்கக் கதை)
24. மாமியார் மெச்சிய மருமகள்
-ஜூனியர் தேஜ்
(ஆதிரை – 12 – 18 – 2021)
"லதா மாதிரி மருமகளைப் பெற நான் கொடுத்து வச்சிருக்கணும் வேணி ." என்றாள் அகிலாண்டம்.
"அப்படியா! அவ்வளவு உயர்ந்த குணமா ஆன்ட்டி அவளுக்கு?" – போனில் வியந்தாள் வேணி
"சொன்னா நம்பமாட்டே! அவள் வந்ததிலிருந்து என் துணிகளைக்கூட என்னை துவைக்க விடாம, அவளேதான் துவைக்கறான்னா பாரேன். ஆனால் துவைத்த துணியை நான்தான் காயப் போடுவேன்…!"
"பரவாயில்லையே... ! இந்த காலத்துலயம் இப்படி ஒரு மருமகளா...?"
வியந்தாள் வேணி.
அந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்தாள் வேணி. அலுவலகம் விடுமுறை என்பதால் லதா மட்டுமே வீட்டிலிருந்தாள்.
"வாங்க…! வாங்க...!
உட்காருங்க...!”
இன்முகத்துடன் வரவேற்றாள் லதா.
தொடர்ந்து “அத்தை கோவிலுக்கு போய் இருக்காங்க....!” என்றாள்.
" பரவாயில்லம்மா...!
நான் பார்க்க வந்தது உன்னைத்தான். மாமியார் துணிகளையெல்லாம்
நீ துவைச்சிப்போட்டு, மாமியார் மெச்சும் மருமகளா நீ இருக்கறதைக்
கேள்விப்பட்டதும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு!" என்றாள் வேணி
எங்க
அத்தை துணி துவைச்சா ஏகப்பட்ட சோப்பு, சர்ஃப், வேஸ்ட் பண்ணிடறாங்க;
தேவைக்கதிகமாத் தண்ணி யூஸ் பண்ணி;
டாங்க்க காலிப் பண்ணிடறாங்க;
அதான் வேற வழியில்லாம நானே துவைச்சித்
தொலைக்கறேன்...!”
கோயிலில் இருந்து திரும்பிய அகிலாண்டத்தின் காதுகளில் மருமகளின் பேச்சு விழ உறைந்து நின்றாள்.
అఅఅఅఅఅఅఅఅ
Comments
Post a Comment