104. குடியரசு நாள்- ஒரு பார்வை  (கட்டுரை)

ஜூனியர் தேஜ்

விகடன் (26.01.23)

    ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர, ராஜ குல திலக, ராஜ வைராக்ய, மா மன்னர், பெருங்கோ…..

இது போன்ற பட்டங்களை சுதந்திர இந்தியாவில் இன்று நாம் கேட்க முடிவதில்லையல்லவா.

காரணம் என்ன?

உலகில் ஏறத்தாழ அனைத்து நாடுகளும் ஏதோ ஓர் காலகட்டத்தில் மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட நிலங்களே ஆகும்.

மன்னர்கள் எனப்படும் தனி நபர்களின் விருப்பு வெறுப்புகள், கோப தாபங்கள், இவை அனைத்தும் ஒரு நாட்டை ஆள்வதற்கு இடையூராக அமைந்துவிடக்கூடாது என்பதற்காக மக்களே மக்களை ஆண்டு கொள்வது என்பது போன்ற ஒரு அமைப்பு கிரேக்க நாட்டிலும், அதைச் சுற்றி இருக்கக் கூடிய பல நாடுகளிலும் அமலுக்கு வந்தது.

இதைத்தான் Democracy , A system in which the government of a country is elected by the people. என்று கூறுகிறோம்.

எழுதி வைக்கப்பட்ட  வரலாற்றுச் சின்னங்களின் ஆதார அடிப்படையில் நம் இந்தியா ஏறத்தாழ 3000 வருடங்களாகத் தொடர்ந்துப் பல மன்னர்களாலும், பேரரசர்களாலும் ஆளப்பட்ட ஒரு நாடாகவே இருந்ததை நாம் நன்கு அறிவோம்.

1757 ல் பிளாசிப் போர் (Battle of Plassey)

பிளாசிப் போர் என்பது East India Company என்றுச் சொல்லக்கூடிய கிழக்கிந்தியஙக கம்பெனிக்கும், வங்காள மன்னர் நிஸாம்க்கும் இடையே நடைபெற்றது. இதில் கிடைத்த வெற்றிதான், இந்திய மண்ணில் ஆங்கிலேயர்கள் வெற்றி வாகை சூடிய முதல் போர் என்பது குறிப்பிடத்தக்கது..

The Battle of Plassey was the first turning point of getting east india compeny’s influence in India.

1757 முதல் 1857 வரை சரியாக 100 வருடங்கள், ஒரு சாதாரண வணிக நிறுவனமாகத் தொடங்கி, உலகிலேயே அரசாங்கத்துக்கு இணையான அந்தஸ்தைப் பெற்றது.

 இதை எதிர்த்து, 1857 ல் வட இந்தியா முழுவதும் ஒரு மிகப் பெரிய சுதந்திரப் போர் The First War Of Independence நடைபெற்றது.

ஆனால் அதற்கு முன்னரே தமிழ் நாட்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்துச் செய்தப் போராட்டங்களில் முதன்மையனது 1790 களில் வீர மங்கை வேலு நாச்சியார் அவர்கள், கிழக்கிந்தியக் கம்பெனிகளை எதிர்த்து ஆயுதமேந்திப் போராடி, வெற்றி வாகை சூடி தன் ஆட்சியை 10 ஆண்டு காலம் தக்கவைத்துக் கொண்டு இருக்கிறார் என்பதே ஆகும்.

1857 ல் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஊடுறுவலை முற்றிலும் கலைத்து பூண்டோடு அழிக்கப்பட்டபிறகு 1858 முதல் 1947 வரை இந்தியாவை நேரடியாக பிரிட்டிஷ் மன்னரின் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்தார்கள்.

அப்பொழுதும் இந்தியா, மன்னர் ஆட்சியிலேயேதான் இருந்தது.

1880 களிலே சுதந்திரப் போராட்டம் என்பது கொஞ்சம் கொஞ்சமாகச் சூடுபிடிக்கத் தொடங்குகிறது.

1885ல் காங்கிரஸ் கட்சி நிறுவப்படுகிறது.

மகாத்மா காந்தி  அவர்கள் தென்னாப்பிரிக்காவில் நிற வெறியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தி, சில மாற்றங்களை ஏற்படுத்தினார்.

பிறகு இந்தியாவிற்கு வந்து தன்னை முழுமையாக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டார்.

1909ல் முதல் அரசியல் சட்டம் First Government of India Act  கொண்டு வரப்படுகிறது.

1919 லே இரண்டாவது இந்திய அரசியல் சட்டம் என்று சொல்லக் கூடிய (Second Government of India Act) கொண்டு வரப்படுகிறது.  

அதைத் தொடர்ந்து 1935 ல் மறுபடியும் ஒரு இந்திய அரசியல் சட்டம் Government of India Act கொண்டுவரப்படுகிறது.  இந்த 1935 சட்டத்தின் மூலம் இதுவரை இந்தியர்களுக்கு வழங்கப்படாத சலுகைகளும், உரிமைகளும் அந்தஸ்துகளும் வழங்கப்பட்டன.

அதோடு மட்டுமல்லாமல் இந்தியர்களுக்கு மக்களாட்சி எனப்படும் Democracy க்காக தத்துவங்களையும், ஆட்சி அமைக்கத் தேவையான சட்ட விதி முறைகளையும் கோடிட்டுக் காட்டியிருந்தது.

இரண்டாம் உலகப் போரின் மூலமாக வந்த கடுமையான நிதி நெருக்கடி, இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான வலுவான போராட்டங்கள், மற்றும் பல அரசியல், நிர்வாகக் காரணங்களால் ஆங்கிலேய அரசு 1947ல் இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்துவிட்டு, தங்கள் நாட்டிற்குத் திரும்பி விட்டனர் ஆங்கிலேயர்கள்.

ஆனால் நாம் நம்மை எப்படி ஆள வேண்டும் என்பதற்கான, ஒரு சட்ட விதிமுறைகளோ, வரையறைகளோ நம்மிடம் போதுமானதாக இல்லை.

1946 லேயே Constituent Assembly என்று சொல்லக் கூடிய அரசியலமைப்புச் சட்ட நிர்ணயக் குழு நிர்மாணிக்கப்பட்டது.

1947 ஆகஸ்டு 29 அன்று சட்ட மேதை  டாக்டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் தலைமையில் அரசமைப்புச் சட்ட வரைவுக் (Drafting Committee)  குழு உருவாக்கப்பட்டது.

ஆக இந்தியா என்பது ஒரு அரசாங்கமற்ற, சுதந்திரமடைந்த, ஒரு நிலப்பரப்பாக மட்டுமே இருந்தது.

1947 முதல் 1950 வரை Government of India Act , 1935 வகுத்து அளித்த அந்த விதி முறைகளைப் பின்பற்றி ஒரு இடைகால அரசை (Provisional Government) வைத்துக்கொண்டு நாம் ஆட்சியை நடத்திக்கொண்டிருந்தோம்.

இவ்வாறாக அரசியலமைப்புச் சட்டத்தை அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் கடுமையாக உழைத்துத் உருவாக்கி நவம்பர் 26, 1949 அன்றே முழுமையாக எழுதி முடிக்கப்பட்டது.

ஜனவரி 26 1930 அன்று நம் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் விடுதலை கிடைப்பதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியா இன்று முதல் விடுதலை பெற்றுவிட்டது இன்று முதல் நாம் பூர்ண ஸ்வராஜ்  அதாவது முழுமையான விடுதலை ஆன நாள் இன்று என்று கொடியேற்றிக் கொண்டாடினர்.

இருப்பினும் அந்த தேதி ஒரு புனித நாளாகக் கருதப்பட்டு, பின்னாளில் நமது அரசியல் அமைப்புச் சட்டத்தை ஜனவரி 26 1950 அன்று முழுமையாக அமல்படுத்தினர்.

மக்களாட்சி

சுதந்திரம் கிடைத்துவிட்டது.. மக்களே மக்களுக்கு ஓட்டளித்து மக்கள் தங்களை தாங்களே ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.

குடியரசு என்பதற்கு ஒரே ஒரு பொருள்தான்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சாதாரணக் குடிமகனை அதிகாரத்தின் உயரத்தில் அமர்த்தப்பட்டபின்பு, தேவைப்பட்டால் அவரை பொறுப்பிலிருந்து நீங்குவதோ மாற்றி அமைக்கவோ அதிகாரம் பெற்றிருப்பின் அதற்குப் பெயர் குடியரசு.

ஜனவரி 26, 2023 .  இந்தியாவின் 74வது குடியரசு நாளை நாம் சீரும் சிறப்புமாகக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

ஆப்ரஹாம் லிங்கன் அவர்களின் கூற்றுப்படி குடியரசு என்பது மக்களால் மக்களுக்காக மக்களே தேர்ந்தெடுப்பது.  Democracy is an Government for the people by the people of the people.

இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நாள் குடியரசு நாள் ஆகும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் என்பது இந்தியாவின் ஆட்சி நிர்வாகத்திற்கான விதிகளைக் கொண்டுள்ள ஆவணம் ஆகும்.

அண்ணல் அம்பேத்கார் சொன்ன வாசகம்

“Constitution is not a mere lawyers document, it is a vehicle of Life, and its spirit is always the spirit of Age.”

 

ஆண்டுதோறும் குடியரசு நாள் அணிவகுப்பு டெல்லி ராஜபாதையில் நிகழும். குடியரசுத் தலைவர் மாளிகையில் தொடங்கி, இந்தியா கேட் வரை நடக்கும்.


            1950 முதல் ஆண்டுதோறும் இந்த அணிவகுப்பு நிகழ்கிறது.

குடியரசு நாள் அணிவகுப்பின் மரியாதையை இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதியான (Commander-in-Chief ) இந்தியக் குடியரசுத் தலைவர் குடியரசு நாள் அணிவகுப்பில் அளிக்கப்படும் மரியாதையை ஏற்றுக்கொள்வார்.

வேறு நாட்டு அரசின் தலைவர் (பிரதமர் அல்லது அதிபர்) இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராகப் பங்கேற்பார்.

1974 முதல் இந்திய மாநிலத் தலைநகரங்களில் மாநில அரசு சார்பாக நடக்கும் குடியரசு நாள் கொண்டாட்டங்களில் ஆளுநர்களும்,

விடுதலை நாள் கொண்டாட்டங்களில் மாநில முதல்வர்களும் கொடி ஏற்றுகின்றனர்.

குடியரசு நாள் அணிவகுப்பில் கலந்துகொண்ட முப்படை வீரர்களும் தங்கள் முகாமுக்கு திரும்பும் நிகழ்வு 'பாசறை திரும்புதல்' (beating retreat)  எனப்படும்.

குடியரசு நாள் கொண்டாட்டங்கள் நிறைவு பெறுவதைக் குறிக்கும் இந்த நிகழ்வு, ஆண்டுதோறும் ஜனவரி 29, மாலை இந்திய நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை அருகே அமைந்துள்ள விஜய் சவுக்கில் நடக்கும்.

போர்க் காலங்களில் வீர தீர செயல்களில் ஈடுபட்டதற்காக பரம் வீர் சக்ரா, மகா வீர் சக்ரா, வீர் சக்ரா ஆகிய விருதுகளும், போர் இல்லாத காலங்களில் வீர தீர செயல்களில் ஈடுபட்டதற்காக அசோகச் சக்ரா, கீர்த்தி சக்ரா, சௌர்ய சக்ரா ஆகிய விருதுகளும் இந்திய அரசால் குடியரசு நாளில் வழங்கப்படுகின்றன.

 “You must be the change you want to see in the World” — Mahatma Gandhi.

 “Citizenship consists in the service of the country." – Jawaharlal Nehru

“Swaraj is my birth right and I shall have it” – Lokmanya Bal Gangadhar Tilak

வாழ்க பாரதம்

ஜெய்ஹிந்த்

Comments

Popular posts from this blog

124. போதிமரம் (சிறுகதை)

139. புது வருஷப் பரிசு - சிறுகதை