Posts

Showing posts from May, 2024

149 சிறிய பெருந்தகைகள் (சிறுகதை)

Image
  149. சிறிய பெருந்தகைகள்  (பரிசு பெற்ற சிறுகதை)                  -ஜூனியர் தேஜ் ( கொலுசு – ஜூன் - 2024)                                        “ஜ னனி...” “ம்...!” “வா..........ங்...கறேன்ல...!” – தோழி, மயூரியின் குரலில் அவசரமும், பதட்டமும் தெரிந்தன. “இதோ... வந்தேன்...!” – என்று மயூரியின் அருகில் வந்தாள் ஜனனி. அழைத்தபோது மயூரியிடம் இருந்த அவசரம் சற்றே மங்கியது, நாம் செய்வது சரிதானா?, என ஒரு கன யோசிப்பில் சுருக்கிக் கொண்ட முக ரேகைகள், சரிதான், என்று உறுதிப்படுத்திக் கொண்டபின் இயல்பானது. “அவசரமா அழைச்சிட்டு, என்னடீ யோசனை மயூரி..?”- ஜனனி இயல்பாகக் கேட்டாள். *** ஒ ளிர்ந்து கொண்டிருந்த கைப்பேசியை ஜனனியின் கையில் திணித்தாள் – “இதப்பாரு…!” – என்று அவசரப்படுத்தினாள். கைப்பேசியில் இருந்த நிழற்படத்தை இயல்பாகப் நோக்கிய, ஜனனியின் பார்வைச், சடாடெனத் தீவிரமானது. ‘அம்மா, அம்மாவேதான்...!” உள்ளே ஒலித்தது. பெரு மற்றும் ஆள்காட்டி விர...

148. ப்ரொஸிஜர் (சிறுகதை)

Image
  148. ப்ரொஸிஜர் (மக்கள் குரல் – 27.05.2024)                                  -ஜூனியர்தேஜ் நெ ஞ்சைப்பிடித்தபடித்   துடிதுடித்தார் பெரியவர். அப்படியொரு வலி. திருகித் திருகி வலித்தது. நெஞ்சின் மையத்தில் கட்டைவிரலையும் இடப்பக்க மார்பகப் பகுதியில் மற்ற விரல்களையும் வைத்து மசாஜ் செய்து கொண்டார். வலி நொடிக்கு நொடி உச்சத்தை நோக்கி நகர்ந்தது. குபீரென வியர்த்துக் கொட்டியது. கதர்ச் சட்டைத் தெப்பலாய் நனைந்தது. கத்துவதற்கு முயற்சித்தார். குரல் வரலில்லை. இடது கையால் மெத்தையைத் தட்டினார். காலால் டீப்பாயில் இருந்த தண்ணீர் சொம்பை எத்தித் தள்ளினார். “ட..ட..ங்.. ” என்று ஒலியெழுப்பி உருண்டது தண்ணீர் சொம்பும் அதன் மேல் மூடப் பட்டத் தட்டும். மூச்சைப் பிடித்துக் கொண்டு சௌ...என ஒரு கத்து கத்தினார். சத்தம் கேட்டு, தன் அறையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த பேத்தி, சௌமியா “தாத்தா.. ” என்று பதறிக்கொண்டே ஓடி வந்தாள். என்ன செய்வது...

147. சுவாமிநாதன் ( சிறுகதை)

Image
 147. சுவாமிநாதன்   ( விகடகவி 25.05.24) மு த்துக்குமரன், 10ம் வகுப்பு 'உ' பிரிவில், கரும்பலகையில் எழுதப்பட்டிருந்தக் கணிதக் குறிப்புகளைக் குறிப்பேட்டில் விரைவாகப் பதிவுச் செய்துகொண்டான். பதின்ம வயதிற்குறிய சுறுசுறுப்பும், குறுகுறுப்பும் அவனிடம் சற்று மிகையாகவே இருந்தது. ‘குறிலே நெடிலே குறிலிணை குறில் நெடில் ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி நேரும் நிரையும் என்றிசின் பெயரே. ” தமிழய்யா இன்றைய தினம் ஒப்பிக்க வேண்டும் என்று சொல்லியத், தொல்காப்பியம், பொருளதிகாரம் 312 வது செய்யுளை மனதிற்குள் மீண்டும் மீண்டும் மனனம் செய்தபடி இருந்தான் முத்துக்குமரன். இ துபோல, வாயிலே நுழையாதக் கரடு முரடானப் பாக்களையும், நன்னூல் சூத்திரங்களையெல்லாம்கூடப் பிஞ்சு உள்ளங்களில் ஏற்றிவிடுவார் தமிழாசிரியர் வரதராசனார் அவர்கள். “பொருள் புரியவில்லையே அய்யா...? ” என்று ஒரு முறை வகுப்பில் ஒரு மாணவன் கேட்டபோது, “இப்போது மனனம் செய்...! புரியும்போதுப் பொருள் புரியும்...! ” என்றார். ‘எழுதாக் கிளவி ’ யான மறைகளைத், திரும்பத் திரும்பச் சொல்லி, உருப் போடுவதைப் போலத் தமிழ்ச் செய்யுள்களையும், நன்னூல் சூத்திரங்களையும், உ...