Posts

Showing posts from June, 2024

152. கேபிடல் லெட்டர். (மக்கள் குரல் 06.07.2024)

Image
152 . கேபிடல் லெட்டர். (சிறுகதை) ஜூனியர் தேஜ் மக்கள் குரல் 6.7.24 ம ருத்துவர் மருந்துச் சீட்டில் எழுதும்போது, பரிந்துரைக்கப்படும் மருந்து மாத்திரைகளின் பெயரை ‘கேப்பிடல் எழுத்தில் எழுதவேண்டும்... ’ என்று மருத்துவத்துறை வெளியிட்ட ஆணையைப் பார்த்தது முதல் டாக்டர் கதிரேசனுக்கு ஒரே மன அழுத்தம். எல்.கே.ஜி, யு.கே.ஜி..ல் , மிஸ்ஸோடக் கையைப் பிடித்து எழுதிப் பயிற்றுவித்த, கேப்பிடல் எழுத்துக்களை, பலமுறை எழுதி எழுதிப் பார்த்துக் கற்றுக் கொண்டது நினைவில் இருக்கிறது. மேல் வகுப்புக்கு வர வர கர்சீவ் லெட்டர் கற்றுக் கொடுத்தார்கள். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும், தொடர்ந்த பயிற்சியால்,  , ஒன்பதாம் வகுப்பு வரை சங்கிலியைக் இழுத்துக் கட்டியதுபோல கோர்த்துக் கோர்த்து எழுதி எழுதிப் பழக்கமாகிவிட்டது. *** கி ராமப்புறத்தில், அரசுப் பள்ளியில் படித்தால், மெடிக்கல் சீட்டுக்கு முன்னுரிமை என்று அரசாங்கம் சொன்னதால் கதிரேசனைக் கொண்டுபோய், ஒரு கிராமத்துப் பள்ளியில் சேர்த்தார்கள். அங்கே இவர் எழுதிய கர்சீவ் எழுத்தைத் தூக்கி மூஞ்சியிலேயே அடித்தார்கள். “என்னா இது, கோழி நடந்தாமாதிரி, சாதாரணமா எழுது..! ” என்ற...

151. பிற்பகல் (மக்கள் குரல் 20.06.24)

Image
 151. பிற்பகல் (சிறுகதை). வகுப்புக்குப் போகும்போது, பல ஆசிரியர்கள், ‘First impression is the Best Impression’ என்பதை மனதில் கொண்டு, தங்களிடம் படிக்கப் போகும் மாணவர்கள் தன்னைப் பற்றி ஒரு உயர்ந்த அபிப்ராயத்தைப் பெறவேண்டும், என்ற எண்ணத்தில், கையில் புத்தகம், பாடக்குறிப்பேடு போன்றவைகளைக் கொண்டு செல்வார்கள். புன்னகையோடு மாணவர்கள் முன் பேசுவார்கள்.  ஒரு சில ஆசிரியர்கள் கையில் பிரம்போடும், முகத்தில் இறுக்கத்தோடும் சென்று, முதல் பார்வையிலேயே மாணவர்களுக்கு பய உணர்வைத் தூண்டிவிடுவார்கள்.   ஆனால் ஆசிரியர் நவநீதகிருஷ்ணன் வித்தியாசமானவர். “எந்த விதத்தில் வித்தியாசமானவர்?” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சொல்கிறேன்.  நவநீதகிருஷ்ணன் சார், ஒரு பிளாஸ்டிக் குவளையை எடுத்துக்கொண்டுதான் வகுப்புக்குப் போவார். மேஜையில் அந்தக் குவளையை வைப்பார். புன்னகையும் இல்லாமல், இறுக்கமும் இல்லாமல் மையமாக முகத்தை வைத்துக் கொண்டு பாடம் நடத்தத் தொடங்கிவிடுவார்.  நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர் நிலைப் பள்ளிக்கு வந்து சேர்ந்துள்ள மாணவர்களில் ஒருவரேனும் முதல் பிரிவேளை முடிவதற்குள், எழுந்து நின...

150. மறுபக்கம் (தினமணி கதிர் (16.06.24)

Image
 150. மறுபக்கம் (சிறுகதை) -ஜூனியர்தேஜ் தினமணி கதிர் (16.06.24) ராஜராஜன் சார், சமீபத்தில் பணி ஓய்வுப் பெற்ற உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர். எண்ணம், சொல், செயல், பார்வை எல்லாமே தனித்துவமாய், வித்தியாசமாய் இருக்கும் அவரிடம். Old age is not for taking rest. To Strive, To seek, To find… Not to Yield... என்ற ‘லார்ட் டென்னிசன்’ ன் தத்துவத்தைத் தன் கொள்கையாய்க் கொண்டவர். எந்தவொரு நிலையிலும், எவருக்காகவும் தன் முடிவை மாற்றிக் கொள்ளாதவர். *** “அவுருக்கிட்ட யாரு பேசுறது...! ஊரு உலகத்துல இல்லாத அதிசமாத்தானேப் பேசுவாரு...!”  “சரியான கோணக்-கட்சி ஆசாமி...! அவருட்ட பேச நம்மாலாவாதுப்பா!” “வடக்குன்னா தெக்கும்பாரு...! கீழன்னா மேலம்பாரு...! அவுருகிட்டப் பேசி ஜெயிச்சிர முடியுமா...?” “நொரநாட்டியம் பேசுறவருகிட்டே நமக்கென்ன ஒறவுங்கறேன்...!” இப்படியெல்லாம் பரவலாக அவரைப் பற்றி, அபிப்ராயம் இருப்பதால் யாரும் அவரிடம் பேசவே யோசிப்பார்கள். *** ராஜராஜன் சார், தன் மனைவி வசுந்தரா டீச்சரைப் பள்ளி வளாகத்துக்குள்,  இறக்கிவிட்டு ‘யு டர்ன்’ போட்டுத் திரும்பினார்.  சோகமான முகத்துடன், உடைந்த குரலில், “சார...