Posts

Showing posts from June, 2024

151. பிற்பகல் (சிறுகதை)

Image
 151. பிற்பகல் (சிறுகதை). வகுப்புக்குப் போகும்போது, பல ஆசிரியர்கள், ‘First impression is the Best Impression’ என்பதை மனதில் கொண்டு, தங்களிடம் படிக்கப் போகும் மாணவர்கள் தன்னைப் பற்றி ஒரு உயர்ந்த அபிப்ராயத்தைப் பெறவேண்டும், என்ற எண்ணத்தில், கையில் புத்தகம், பாடக்குறிப்பேடு போன்றவைகளைக் கொண்டு செல்வார்கள். புன்னகையோடு மாணவர்கள் முன் பேசுவார்கள்.  ஒரு சில ஆசிரியர்கள் கையில் பிரம்போடும், முகத்தில் இறுக்கத்தோடும் சென்று, முதல் பார்வையிலேயே மாணவர்களுக்கு பய உணர்வைத் தூண்டிவிடுவார்கள்.   ஆனால் ஆசிரியர் நவநீதகிருஷ்ணன் வித்தியாசமானவர். “எந்த விதத்தில் வித்தியாசமானவர்?” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சொல்கிறேன்.  நவநீதகிருஷ்ணன் சார், ஒரு பிளாஸ்டிக் குவளையை எடுத்துக்கொண்டுதான் வகுப்புக்குப் போவார். மேஜையில் அந்தக் குவளையை வைப்பார். புன்னகையும் இல்லாமல், இறுக்கமும் இல்லாமல் மையமாக முகத்தை வைத்துக் கொண்டு பாடம் நடத்தத் தொடங்கிவிடுவார்.  நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர் நிலைப் பள்ளிக்கு வந்து சேர்ந்துள்ள மாணவர்களில் ஒருவரேனும் முதல் பிரிவேளை முடிவதற்குள், எழுந்து நின...

150. மறுபக்கம்

Image
 150. மறுபக்கம் (சிறுகதை) -ஜூனியர்தேஜ் தினமணி கதிர் (16.06.24) ராஜராஜன் சார், சமீபத்தில் பணி ஓய்வுப் பெற்ற உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர். எண்ணம், சொல், செயல், பார்வை எல்லாமே தனித்துவமாய், வித்தியாசமாய் இருக்கும் அவரிடம். Old age is not for taking rest. To Strive, To seek, To find… Not to Yield... என்ற ‘லார்ட் டென்னிசன்’ ன் தத்துவத்தைத் தன் கொள்கையாய்க் கொண்டவர். எந்தவொரு நிலையிலும், எவருக்காகவும் தன் முடிவை மாற்றிக் கொள்ளாதவர். *** “அவுருக்கிட்ட யாரு பேசுறது...! ஊரு உலகத்துல இல்லாத அதிசமாத்தானேப் பேசுவாரு...!”  “சரியான கோணக்-கட்சி ஆசாமி...! அவருட்ட பேச நம்மாலாவாதுப்பா!” “வடக்குன்னா தெக்கும்பாரு...! கீழன்னா மேலம்பாரு...! அவுருகிட்டப் பேசி ஜெயிச்சிர முடியுமா...?” “நொரநாட்டியம் பேசுறவருகிட்டே நமக்கென்ன ஒறவுங்கறேன்...!” இப்படியெல்லாம் பரவலாக அவரைப் பற்றி, அபிப்ராயம் இருப்பதால் யாரும் அவரிடம் பேசவே யோசிப்பார்கள். *** ராஜராஜன் சார், தன் மனைவி வசுந்தரா டீச்சரைப் பள்ளி வளாகத்துக்குள்,  இறக்கிவிட்டு ‘யு டர்ன்’ போட்டுத் திரும்பினார்.  சோகமான முகத்துடன், உடைந்த குரலில், “சார...