கலியன் மதவு அத்யாயம் 17 மற்றும் 16 விமரிசனம்
1.
திரு சின்னஞ்சிறு கோபு அவர்கள். மூத்த எழுத்தாளர், தமிழ்நாடு.
2. திரு ஹரிகோபி அவர்கள், மத்திய ஆயுத காவல்படையிலிருந்து ஓய்வு பெற்ற சிவில் அதிகாரி,
புதுடெல்லி
3. திரு நத்தம் சுரேஷ்பாபு அவர்கள்
எழுத்தாளர்
4. திரு மயிலாடுதுறை ராஜசேகர் அவர்கள்
எழுத்தாளர்.
5. திருமதி ஜெயந்தி ஸ்ரீனிவாசன் அவர்கள்,
ஓய்வு
வெற்ற யூனியன் வங்கி அதிகாரி.
6. திரு ரா செந்தில்குமார் அவர்கள்,
முதுகலை தொழிற்கல்வி ஆசிரியர், ச மு இந்து மேனிலைப்
பள்ளி, சீர்காழி
7. திரு காசி இளங்கோவன்,
முதுகலை வரலாற்று ஆசிரியர், ச மு இந்து மேனிலைப் பள்ளி, சீர்காழி
8. திரு பி. புலவேந்திரன் அவர்கள்,
முதுகலைத் தமிழ் ஆசிரியர், ச மு இந்து மேனிலைப் பள்ளி, சீர்காழி
9. திரு தி. சீனிவாசன் அவர்கள்,
இடைநிலை ஆசிரியர், ச மு இந்து மேனிலைப் பள்ளி,
சீர்காழி
10. திரு ஆர். வெங்கடேசன் அவர்கள்,
பட்டதாரி ஆங்கில ஆசிரியர், ச மு இந்து மேனிலைப்பள்ளி, சீர்காழி.
11. திரு ஆர். ரமேஷ் அவர்கள்,
பட்டதாரிக் கணித ஆசிரியர், ச மு இந்து மேனிலைப் பள்ளி,
சீர்காழி
12. திருமதி வானதி சந்திரமோகன் அவர்கள்,
பட்டதாரி அறிவியல் ஆசிரியர்,
ச மு இந்து மேனிலைப் பள்ளி, சீர்காழி
13. திருமதி சு.சகுந்தலா அவர்கள்,
என் சகோதரி, பழூர், திருச்சி மாவட்டம்.
14. திருமதி நீலா ராமரத்தினம் அவர்கள்,
(என் அத்தை ), சென்னை
15. திரு ஜி சுந்தர்ராஜன்,
முதுகலை ஆங்கில ஆசிரியர், ச மு இந்து மேனிலைப் பள்ளி, சீர்காழி
16. திரு சுவாமிநாதன் , எழுத்தாளர், சென்னை
17.திரு லெ.பிரதீப் அவர்கள், முதுகலைக் கணித ஆசிரியர்,
ச மு இந்து மேனிலைப் பள்ளி, சீர்காழி
18. திரு என்.ஏ.சண்முகம் அவர்கள், பட்டதாரிக் கணித ஆசிரியர்,
ச மு இந்து மேனிலைப் பள்ளி, சீர்காழி
19. திருநாவுக்கரசு.சு, கட்டடப் பொறியாளர் , சீர்காழி.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
நமது நண்பர் ‘ஜூனியர் தேஜ்’ அவர்கள் எழுதும் 'கலியன் மதவு' என்ற தொடர்கதையை நமது அமைப்பில் எத்தனைபேர் படிக்கிறீர்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் படிக்க ஆரம்பித்தால் நீங்கள் ஒரு தமிழக கிராமத்திற்குச் சென்று அங்கேயே வாழ்ந்து வருவதைப் போன்ற ஒரு உணர்வை நிச்சயம் பெறுவீர்கள். மிகவும் நுணுக்கமான எழுத்து. கதாபாத்திரங்களை கண்முன் அப்படியே உலாவவிடும் தன்னிகரற்ற எழுத்து.
கிராமத்து மண்ணின் மணம் அப்படியே இந்த நாவலில் இருக்கிறது. வயல்வெளிகள், விவசாயம், விவசாயம் சார்ந்த காளவா போன்ற தொழில்கள், தெருக்கள், வீடுகள்,மாடு கன்றுகள், சிறுவர்களின் விளையாட்டுகள், அவர்களின் மன உணர்வுகள் என்று ஜூனியர் தேஜ் அசத்துகிறார்.
ஆழ்ந்த வாழ்க்கை அனுபவங்கள் இல்லாமல் இப்படியெல்லாம் எழுதமுடியாது. இப்படி ஒரு கிராமத்தின் அழகியலை அப்படியே கொண்டுவரும் நாவல் எதையும் நான் சமீபகாலத்தில் படித்ததில்லை.
இந்த நாவலுக்குப் படங்கள் சேர்ப்பதிலும் ஜூனியர் தேஜ் தனிக் கவனம் செலுத்தி வருகிறார். அது இந்த நாவலில் மனம் ஒன்றி திளைப்பதற்கு மேன்மேலும் உதவுகிறது.
இந்த நாவல் இதுவரை ஆறு அத்தியாயங்கள் வெளிவந்திருக்கிறது. இந்த ஆறு அத்தியாயங்களை படித்ததிலிருந்து நான் அசந்துப்போய் ஆயிரமாயிரம் மலரும் நினைவுகளில் மகிழ்ந்திருக்கிறேன். நீங்களும் நம்ம ஜூனியர் தேஜ்ஜின் கலியன் மதவு என்ற இந்த தொடர்நாவலை படித்து பாருங்களேன்!
*-சின்னஞ்சிறுகோபு*
*கலியன் மதவு* அத்தியாயம் *7* படித்தேன்.*ஜூனியர் தேஜ்* சார், இந்த அத்தியாயத்தின் அழகும், விறுவிறுப்பும் மனதை அப்படியே அள்ளுகிறது. காட்சிகளும், அதற்கு தாங்கள் வரைந்திருக்கும் ஓவியங்களும் கண்முன் அப்படியே உண்மைபோலவே விரிந்து நம்மையும் அங்கே கொண்டு செல்கிறது. தங்களுடைய ஆழ்ந்த கூர்மையான அனுபவமும், எழுத்து நடையும் ஒவ்வொரு வரியிலும் பிரதிபலிக்கிறது. கதை கொஞ்சம் 'திக் திக்' கென்று அடுத்தது என்ன நடக்கப்போகிறதோ என்று மனக்கவலையையும் ஏற்படுத்துகிறது.
*இந்த கதையை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இது அனைவரும் படிக்க வேண்டிய அற்புதம் என்பதை மட்டும் நான் உறுதியாக சொல்வேன்!*
*-சின்னஞ்சிறுகோபு*
கலியன் மதவு நாவலின் எட்டாவது அத்தியாயத்தைப் படித்துத் திக்பிரமை பிடித்தது போல நிற்கிறேன். அப்படியே காவிரி ஆறு கண்முன் ஓடுகிறது. இறந்தவர்களின் உடல்கள், அதை எடுத்து வரும் விதம், பிரச்சனைகள் என்று அந்த கிராமமக்கள் உணர்வு பூர்வமாக மனதில் நடமாடுகின்றனர். கதையை சீக்கிரம் முடித்து விடுவீர்களோ என்று தோன்றுகிறது. அப்படி செய்யாதீர்கள்!
*-சின்னஞ்சிறுகோபு*
*ஜூனியர் தேஜ்* அவர்களின் *கலியன் மதவு* நாவலின் *அத்தியாயம் -9* தை படித்தேன்.
முத்தனூர் எல்லையில் பிரேதம் மறிக்கப்படுவது, மாதய்யா முத்தனூர் ஆட்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் பிரேதத்தை திருப்பிக்கொண்டுவந்து, தனது வயல்வழியாக எடுத்துச் செல்வது, அதைப்பற்றி அந்தனூர் மக்களின் பேச்சுகள் என்று எல்லாமே கண்முன் நிகழ்ச்சியாக உண்மைபோல் ஓடுகிறது.
அதுபோல வயல்களில் இரண்டாம் பாட்டம் அறுப்பு வேலைகள் நடக்கும் நிகழ்ச்சிகளை படிக்கும்போது, நாமும் அங்கே அந்த பூவரசு களத்திலிருந்து, அதையெல்லாம் பார்த்துக்கொண்டே இருப்பதுபோல் உணரமுடிகிறது. வயல்வெளி அறுவடைக் காட்சியை இவ்வளவு உயிரோட்டமாக நான் நேரில் கூட உணர்ந்ததில்லை.
மாதய்யா வண்டியிலிருந்து தடுமாறி கீழே விழுந்து, அவர் காலில் வண்டிச் சக்கரம் ஏறி இறங்கியதை உணரும்போது, மனதில் ஒரு சோகம் கலந்த வலி ஏற்படுகிறது.
ஐயா, ஜூனியர் தேஜ் சார், நீங்கள் அற்புதம் செய்கிறீர்கள். கலியன் மதவு என்ற தங்களது நாவலின் இந்த 9-ம் அத்தியாயத்தைப் படித்து அசந்துப்போய் நிற்கிறேன்.
*-சின்னஞ்சிறுகோபு*
நான் இப்போது தொடராகப் படித்துவரும் ஒரே நாவல் *கலியன் மதவு* என்ற ஜூனியர் தேஜின் நாவல் மட்டுமே! இந்த நாவலைப் படிக்கும்போது ஏதோ அறுபது எழுபது காலக்கட்டத்தில் கிராமத்தில் வசிப்பதைப்போன்ற ஒரு உணர்வும், மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.
மாதய்யா காலில் மாவுக்கட்டுப் போட்டுக்கொண்டு இரண்டரை மாதங்களை கடப்பதைப் பார்க்கும்போது, ஏதோ நமக்கே அடிப்பட்டு கால்கட்டுடன் சிரமப்படுவதைப் போன்ற ஒரு வலிகலந்த உணர்வு ஏற்படுகிறது. மிகவும் விரிவான சிறப்பான விவரிப்பு.
கணேசப்பிள்ளை மாதய்யாவைப் பார்க்க வீட்டுக்கு வரும் நிகழ்ச்சிகளைப் படிக்கும்போது, ஏதோ நாமே கணேசப்பிள்ளையாகவே மாறி வடைப்பாயசத்துடன் சாப்பிடுவது போல இருக்கிறது.
குந்தலாம்பாள் கை மிஷினில் காப்பிக்கொட்டை அரைக்கும்போது அந்த ஓசையை மட்டுமல்ல; அந்த ஃபீப்ரி காப்பிப்பொடியின் மணத்தையும் உணரமுடிகிறது.
அதுபோல அறுவடை காட்சிகள், குதிர்கள் பத்தாயங்களெல்லாம் கண்முன் வந்துப்போகின்றன.
இந்த நாவலில் இடம்பெறும் படங்கள் அதிஅற்புதமாக இருக்கின்றன. படங்கள் நாவலின் உயிரோட்டத்திற்கு சிறப்பாக உதவி செய்கின்றன.
ஜூனியர் தேஜின் கலியன் மதவு என்ற இந்த தொடர்கதையை படிப்பவர்கள், ஒரு மறக்கமுடியாத சூழ்நிலையில் வாழ்ந்து வருவார்கள் என்பது மட்டும் நிச்சயம்!
*சின்னஞ்சிறுகோபு*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மத்திய ஆயுத காவல்படையிலிருந்து ஓய்வு பெற்ற சிவில் அதிகாரி , புதுடெல்லி
அத்தியாயம்-1
கலியன் மதவு நாவல் முதல் அத்தியாயமே நல்ல விறுவிறுப்புடன் நகர்கிறது. முதல் அத்தியாயத்தின் ஹைலைட்டான அகிலாண்டக் கிழவியின் ஆளுமையை சிறுசிறு சம்பவங்களால் இணைத்து கண்முன்னே கொண்டு வந்திருப்பதும், வட்டார வழக்கிலேயே கதாபாத்திரங்களை பேச வைத்திருப்பதும் வாசகனை சம்பவ இடத்துக்கே அழைத்துச் சென்று கதையோடு ஒன்றச் செய்து விடுகிறது. படித்து முடித்தபின்னும், அந்த கிராம சூழ்நிலையிலிருந்து வெளியே வர வெகு நேரமாகிறது, இது கதாசிரியரின் வெற்றி.
அத்தியாயம்-2
‘ஒவ்வொரு பசுவையும் தனிக் கொட்டகையில் கட்டித்தான் கறக்கவேண்டும் என்பது மாதய்யாவின் சித்தாந்தம். கன்றுகளும் குழந்தைகள்தான். ஒரு கன்று தாய் மடியில் பால் ஊட்டும்போது மற்ற கன்றுகள் அதைப் பார்த்து ஏங்கக்கூடாது...’ என்று நினைப்பவர் அவர். ‘ஒவ்வொரு பசுவையும் தனிக் கொட்டகையில் கட்டித்தான் கறக்கவேண்டும் என்பது மாதய்யாவின் சித்தாந்தம். கன்றுகளும் குழந்தைகள்தான். ஒரு கன்று தாய் மடியில் பால் ஊட்டும்போது மற்ற கன்றுகள் அதைப் பார்த்து ஏங்கக்கூடாது...’ என்ற வரிகளின் மூலம் மாதய்யாவின் தயையும், அவர் வாயில்லா ஜீவன்களையும் தம் மக்கள் என்றே எண்ணுவது அவரது உயர்ந்த குணத்தையும் எடுத்துக்காட்டுகிறது. கிராமிய நடையிலேயே கதையை நகர்த்துவது படிப்பதற்கு சுவாரசியமாக உள்ளது
அத்தியாயம்-3
தொப்ளான் என்ற மனிதரை தெய்வ நிலைக்கு உயர்த்திய மாதய்யாவின் சிந்தனைகள் மனதை நெகிழ வைக்கிறது. மரணத்திற்கு பின் கிராமங்களில் கடைபிடிக்கப்படும் சம்பிரதாய சாங்கியங்களை விரிவாகவும் ஊடே பெரும்பாலான கிராமங்களில் இப்போதும் அனுபவித்து வரும் வழிப்பிரச்சினையையும் கண்முன்னே கொண்டு வந்தது.
அத்தியாயம்-4
மாதய்யாவின் மனதை உறுத்திக்கொண்டிருந்த புடல்கொல்லை ரகசியத்தின் விடை கிடைத்ததும் முன்பை விட அதிகமாக சஞ்சலம் அடையத் தொடங்கிவிட்டார்.
இடையிடையே ஊடாடும் மகனைப் பற்றிய நினைவுகளும் அதை விட அதிகமாக மண்ணின் மகத்துவம் அறியாமல் தொலைதூரத்தில் வேலை செய்யும் மகன் மீது கொண்டுள்ள கோபத்தையும் நன்கு உணரமுடிகிறது.
அத்தியாயம்-5
மாதய்யாவின் மனைவி குந்தாலம்மாவை சிலாகித்து ஒரு லக்ஷ்மிகரமான உணர்வை ஏற்படுத்தி உள்ளீர்கள். மகன் தொலைவில் இருந்தாலும் அவன்மேல் உள்ள பரிவை தனது வாக்குகளாலும், செயல்களாலும் அடிக்கடி நினைவு கூர்வது தாய்மைக்கே உரிய குணமாகும்
ராமுவுக்கும் சாவித்திரிக்கும் உண்டான காதலின் நதிமூலத்தையும் ரிஷிமூலத்தையும் இந்த அத்தியாயத்தில் அலசியிருக்கிறீர்கள். அமரர் தேஜ் அவர்களின் சித்திரங்கள் பிரமைக்க வைப்பதோடல்லாமல் கதைக் களத்தை கண்முன்னை நிழலாடவிடுகிறது
அத்தியாயம்-6
ராமு-சாவித்திரி காதல் வெளியுலகிற்கு தெரியவந்ததும் நாவல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அடுத்து என்ன என்ற ஆவலையும் ஏற்படுத்தி உள்ளது.
*CONCLUSION*
கதையின் நடையையும், சம்பவங்களின் சீரான கட்டமைப்பையும் பார்க்கும்போது ஒரு கைதேர்ந்த எழுத்தாளரின் படைப்பை அனுபவித்து படிக்கும் சுகம் ஏற்படுகிறது
க்கிரகாரத்தின் பழக்க வழக்கங்களை மீண்டும் படிக்கும்போது பழைய கால நினைவுகள் கண்முன்னே வந்து போகின்றன. கதையின் இடையிடைய காட்டப்படும் ஆங்கில நாவல்களின் மேற்கோள்கள், கதை ஓட்டத்தை குறைப்பதாக எனக்குப் படுகிறது. படிக்கும் வாசகர்கள் அனைவரும் ஆங்கில நூல்களை படித்திருந்தால் மட்டுமே அதில் லயிக்க முடியும்.
சில விஸ்தாரணமான வர்ணனைகளையும் தவிர்க்கலாம். நான் கூறிய இந்த குறிபுகள் எல்லாம் முதல் சில அத்தியாயங்களில்தான் காணமுடிந்தது. ஆறாவது அத்தியாயம் இந்த குறைகள் ஏதுமின்றி To the Pointஆக இருப்பதைப் பார்க்கும்போது இதை நீங்களும் உணர்ந்து அவைகளை களைந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
இந்த நாவல் முடிந்தவுடன் புத்தகமாக பிரசுரிக்க வேண்டும். உங்களை சிறந்த நாவலாசிரயராக அடையாளம் காட்டக்கூடிய எல்லா அம்சங்களும் நிறைந்த ஒரு நல்ல சமூக நாவல் இதுவாக இருக்கும்.
ஹரிகோபி, புதுடெல்லி
ஜூனியர் தேஜ் சார்,
ராமுவும் சாவித்திரியும் காவிரியில் மூழ்கினாலும், அவர்கள் இறந்திருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு அடுத்த அத்தியாயத்திற்காக காத்திருக்கிறேன்.
ஹரிகோபி, புதுடெல்லி
***---------------------*************--------------------***
3.திரு நத்தம்
சுரேஷ்பாபு அவர்கள் எழுத்தாளர்
9 அத்தியாயங்களும் வாசித்தேன். அருமையாக உள்ளது. அந்தக்கால விளையாட்டுக்கள் விவரிப்பு. செங்கல் சூளை பற்றிய விவரிப்பு. வயல் அறுவடை பற்றிய துல்லியமான விவரிப்புக்கள் பிரமிக்க வைக்கிறது.
ஆனால் காவிரி பற்றிய விவரிப்பில் கொஞ்சம் நீண்டுவிட்டது. ஆங்கில கவிதைகள் பொன்மொழிகளை முழுவதுமாக சொல்லி விவரிக்க வேண்டும் என்பதில்லை. அது கதையை விட்டு வெறெங்கோ நகர்த்திச் சென்றுவிடுகின்றது.
மேலும் காதல் என்றாலே மேல்சாதி கீழ்சாதி , குருக்கள் என்று எல்லோரும் எழுதுவதையே நீங்களும் எழுதுவது ஏன் என்று புரியவில்லை. ஒரு வேளை இது உண்மைச் சம்பவத்தை தழுவியிருந்தால் ஒன்றும் செய்ய முடியாது.
நல்லதொரு நாவலாக வளர்ந்து வருகிறது கலியன் மதவு.
வாழ்த்துகள்.
நத்தம் சுரேஷ்பாபு
***---------------------*************--------------------***
4.
திரு மயிலாடுதுறை ராஜசேகர் அவர்கள்
எழுத்தாளர்.
ஜூனியர் தேஜ்: சார் வணக்கம்! தங்களுடைய கலியன் பதிவு தொடரை என்னால் உடனடியாக படிக்க முடியவில்லை.செல்போன் பெரும்பாலான நேரங்களில் என்னிடம் இருக்கவில்லை.அதற்குள் பலர் படித்து கருத்து பதிவு செய்து விட்டார்கள். சி.சி.கோபு சார் ஜாம்பவான். அவருடைய விமர்சனத்தையும், ஹரிகோபி சார் விமர்சனத்தையும் படித்தேன். சொந்த வேலைகள் காரணமாக இப்போதும் படிக்க முடியவில்லை. ஆனால் நிச்சயமாகப் படிப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.வணக்கம்.
அன்புடன்
மயிலாடுதுறை ராஜசேகர்
***---------------------*************--------------------***
5.
திருமதி ஜெயந்தி ஸ்ரீனிவாசன் அவர்கள், ஓய்வு
வெற்ற யூனியன் வங்கி அதிகாரி.
சார் வணக்கம். மிக அருமையான பதிவு.
***---------------------*************--------------------***
6.
திரு ரா செந்தில்குமார் அவர்கள்,
முதுகலை தொழிற்கல்வி ஆசிரியர், ச மு
இந்து மேனிலைப் பள்ளி, சீர்காழி
மிக மிகச் சிறப்பாக நகர்கிறது கலியன்
மதவு. ஒவ்வொரு
அத்யாயத்திலும் மெச்சூரிட்டி தெரிகிறது. வாழ்த்த வார்த்தைகள்
இல்லை. வணங்குகிறேன்.
***---------------------*************--------------------***
7.
திரு காசி இளங்கோவன்,
முதுகலை வரலாற்று ஆசிரியர், ச மு இந்து மேனிலைப்
பள்ளி, சீர்காழி
கலியன் மதவு ரொம்ப நல்லாப் போவுது.
திரு தி. சீனிவாசன் அவர்கள், இடைநிலை
ஆசிரியர், ச மு இந்து மேனிலைப் பள்ளி, சீர்காழி
திருமதி வானதி சந்திரமோகன் அவர்கள், பட்டதாரி
ஆசிரியர், ச மு இந்து மேனிலைப் பள்ளி, சீர்காழி
***---------------------*************--------------------***
8. திரு ப்பி. புலவேந்திரன் அவர்கள் முதுகலைத் தமிழ் ஆசிரியர், ச மு இந்து மேனிலைப் பள்ளி, சீர்காழி
·
என்னுடைய
ஆசிரியரும், வழிகாட்டியுமான திரு
அருணாசலய்யா (தேஜ்) அவர்களின் மகனான
வரதராஜன் (ஜூனியர் தேஜ்) அவர்களின்
கலியன் மதவு நாவல் மிக அருமை.
·
கிராமத்து
அத்தியாங்களை கண் முன் ஓவியமாய் நிறுத்துகிறார். படித்துப் படித்து வியக்கிறேன்.
·
பொருத்தமான
அவருடைய ஓவியங்களும், அமரர் தேஜ் அவர்களின் ஓவியங்களும், அவர் மகன் ராஜேஷ்
அவர்களின் ஓவியங்களும் கண்களையும் மனத்தையும் கவர்கின்றன. வாழ்த்துக்கள்..
பாராட்டுக்கள்.
·
அனுபவம்
அருமையாய்ப் பேசுகிறது. பெருமையாய் இருக்கிறது.
·
கலியன்
மதவு அருமையிலும் அருமை
9.
திரு ட்டி..
சீனுவாசன் அவர்கள், மூத்த இடைநிலை ஆசிரியர், ச மு இந்து மேனிலைப்
பள்ளி, சீர்காழி
·
மிக
நுட்பமான நாவல். சாகித்ய அகாதமிக்கு
தேர்வாக வாய்ப்புள்ள நாவல்.
·
மிக
அருமையான எழுத்து. More Informative.
***---------------------*************--------------------***
10. திரு ஆர். வெங்கடேசன் அவர்கள், பட்டதாரி ஆங்கில ஆசிரியர், ச மு இந்து மேனிலைப்பள்ளி, சீர்காழி.
·
Super sir! Congratulations!
·
முதல் இரண்டு அத்தியாயங்கள் இன்று படித்தேன். அருமை. இன்றைய தலைமுறை தெரிந்து வைத்திராத பல கிராமப்புற வார்த்தைகளை கையாண்டுள்ளீர்கள். சிறப்பு.
11.
திரு ஆர். ரமேஷ் அவர்கள், பட்டதாரிக் கணித ஆசிரியர், ச மு இந்து
மேனிலைப் பள்ளி, சீர்காழி
·
தொடர்ந்து
படிக்கிறேன் சார். ஒரு சில இடங்களை
இரண்டு முறை படித்துத்தான் புரிந்து கொள்ள முடிகிறது. நுட்பமான
எழுத்து. கிராமத்துச் சொலவடைகளை இப்போது மீளப் பார்க்க
முடிகிறது சார். வாழ்த்துக்கள் சார்.
***---------------------*************--------------------***
12. திருமதி வானதி சந்திரமோகன் அவர்கள்,
பட்டதாரி அறிவியல் ஆசிரியர், ச மு இந்து
மேனிலைப் பள்ளி, சீர்காழி
·
As
far as the 9th chapter of Kaliyan Madhavu is concerned, the critical
analysis of the senior writer Mr
Chinancheru Gopu’s openion is 100% True sir.
I also
have felt sir.
During my childhood I had enjoyed the
harvesting period at my grandfather’s field. Again I have gone on that period
when I have read the 9th chapter.
Really I imagined that period.
My sincere wishes sir
C R Vanathi
***---------------------*************--------------------***
13. சு சகுந்தலா, என் சகோதரி,
பழூர் திருச்சி மாவட்டம்
·
கலியன்
மதவு நாவல் மிக மிக அருமையா இருக்கு. கதையைப் படிக்க ஆரம்பிச்சா பாதீல விட முடியலை. அவ்வளவு
அருமை கிராமத்து மணம் மிகவும் அற்புதம். நீ கதையை
அனுப்பறதுக்கு ரொம்ப நன்றி.
***---------------------*************--------------------***
14. நீலா ராமரத்னம்
(என் அத்தை) சென்னை
·
Kaliyan
madhavu Nee ezudiya Naval kadalur Ganesan sujatha azavirku unnai uyarthi
vimarsanam oli nadavil anuppiyathai ketten.
Enakku
mika makilchi.
Un
naval ezuthum thiramai menmelum vazarchi adaindhu chinnathirai, velli thirai
varai vaipukidaika kadavulai pirarthikiren Varadha
***---------------------*************--------------------***
1. 15. திரு ஜி சுந்தரராஜன் அவர்கள் முதுகலை ஆங்கில ஆசிரியர், ச மு இந்து மேனிலைப்
பள்ளி, சீர்காழி
***---------------------*************--------------------***
16. திரு சுவாமிநாதன் , எழுத்தாளர், சென்னை
தங்களின் தொடரை முழுமையாய்ப் படிக்க இயலாத சூழலில், படித்தவரைக்கும்,
தெளிந்த நீரோடை நடை...
சிக்கன வார்த்தை...
ஆர்ந்த கருத்து...
செறிவான தகவல்...
எனத்
தேர்ந்த எழுத்தாளர்க்குரிய
வல்லமை கண்கூடு...
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
17.திரு லெ.பிரதீப் அவர்கள், முதுகலைக் கணித ஆசிரியர்,
ச மு இந்து மேனிலைப் பள்ளி, சீர்காழி
கலியன் மதவு நாவல் அருமையாக உள்ளது சார். தொடர்ந்து படித்துக்காண்டிருக்கறேன்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
18. திரு என்.ஏ.சண்முகம் அவர்கள், பட்டதாரிக் கணித ஆசிரியர்,
ச மு இந்து மேனிலைப் பள்ளி, சீர்காழி
சார் ... உங்க கலியன் மதவு நாவல் என்னை என் சிறு பிராயத்தில் பார்த்த நிகழ்ச்சிகளை மீண்டும் கண் முன் காட்சியாகப் பார்க்க வைக்கிறது சார்.
குதிர், பத்தாயிரத்தில் நெல் கொட்டிய நாட்கள் நினைவுக்கு வருகிறது சார்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
19. திருநாவுக்கரசு.சு, கட்டடப் பொறியாளர் , சீர்காழி.
ஆசிரியருக்கு இனிய வணக்கம்🙏🏻
*கலியன் மதவு* படித்தேன். எழுபதுகளில் பிறந்து இன்று ஐம்பது வயதுகளில் வாழ்பவர்கள் அனைவருக்கும் உங்களுடைய எழுத்து நடையும் கதைக்களமும் நன்கு புரியும் இன்றைய இளைய தலைமுறைகளுக்கு உணர்வுபூர்வமாக புரிய வேண்டும் என்பதற்கு வர்ணனை காட்சிகள் மூலம் மிகவும் முயன்று இருக்கிறீர்கள். மகிழ்ச்சி!
இந்தக் கதைக்காக தங்களின் மெனக்கெடு நன்றாக புரிகிறது.
மூன்றாவது அத்தியாயத்தில் புடல பந்தல் பற்றி ஆசிரியர் விவரிக்கும்போது எங்கள் தோட்டத்தில் நான் சிறு பிராயத்தில் விளையாடிய போது வரும் புடலை வாசனை நினைவுக்கு வந்தது. அதைக்கூட நுணுக்கமாக சொன்ன ஆசிரியரை வெகுவாக பாராட்டலாம்,என்று நினைத்துக்கொண்டே வாசித்தேன். அருமை இங்கே வாசிக்கும் எத்தனை பேருக்கு அந்த புடலை வாசனையை வந்ததோ தெரியாது ஆனால் எனக்கு வந்தது.
*கலியன் மதவு* ல் கவர்ந்த சில வரிகள் அப்படியே இதோ….
*எப்படா... இவன் தடுக்கி விழுவான், கைக் கொட்டிச் சிரிக்கலாம்’னு காத்திருக்கற ஜனங்களுக்கு நடுவுலதான் நீ தடுக்கி விழுந்துராம எல்லாத்தையும் நிர்வாகம் பண்ணணும். அப்படியே தடுக்கி விழுந்துட்டாலும், விழுந்துட்டோமேனு விழுந்தே கிடக்காம பயிற்சி பெற்ற போர் வீரனைப் போல எழுந்து நின்னு வாழ்க்கையோடப் போராடணும். எச்சரிக்கையா இருக்கணும்... எதுக்கும் கலங்காம இருக்கணும்*...
*தன்னைப் புரிந்துகொண்டு இதமாய் சேவகம் செய்யும் சேவகன் கிடைத்துவிட்டால்,*
*எஜமானன் தன்னை இழந்துவிடுகிறான். *
*நாலு மனுஷாளை திருப்திப்படுத்தவேண்டும் என்று இறங்கிவிட்டால், குடும்பம் சீர் குலைகிறது.*
*குடும்பத்தை மட்டும் சீராகவும் சிறப்பாகவும் வைத்திருப்பவன் பொதுவிவகாரத்தில் தலையிடுவதில்லை*.
*பொது வாழ்விலும் சாதித்து, சொந்தக் காரியத்தையும் குறையில்லாமல் வைத்திருப்பது குதிரைக்குக் கொம்பு முளைக்கிற கதைதான்*.
தாங்கள் எழுத்துலகில் நீங்கா இடம் பெற எல்லாம் வல்ல இறையை வேண்டி வாழ்த்துகிறேன்.
வணக்கம்🙏🏻
திருநாவுக்கரசு.சு
சீர்காழி.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
பரணி, என்கிற விஜய காமேஸ்வரி,சென்னை
குமரேசனை போலத்தான் நாங்களும் ஊஞ்சல் கனவோடுஉள்ளோம் கதை அருமை,அதில் காணும் பழூர் ஊஞ்சல், திருவவிசலூர் ஊஞ்சல் சூப்பர்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தொடர்கதையின் அத்தியாயங்களைப் படித்து இரசித்து கருத்துகள் தந்த நட்புக்களின் கருத்துக்களைப் படித்து இரசித்தேன்!
ReplyDeleteமிக்க நன்றி சார்.
ReplyDelete