154 . வாக்கும் வக்கும் (மக்கள் குரல் 20.07.24)
154. வாக்கும் வக்கும் -ஜூனியர் தேஜ் (மக்கள் குரல் 20.07.24) “நம்ம புஞ்சைல தலமாரி நிக்கிற ஒரு தென்ன மரத்தையும், நடு கொல்லைல நிழலடிச்சிக்கிட்டு நிக்கிற வேப்ப மரத்தையும் நீங்க கிரயத்துக்குக் கொடுக்கப்போறதா முனியன் சொன்னான்..” – மர வியாபாரி வெங்கடாசலம் பட்டும் படாமலும் கேட்டான். சில நொடிகள் அமைதிக்குப் பிறகு “குடுக்கறதுதான்.. தேவையை அனுசரிச்சி ஒண்ணோ, இல்ல ரெண்டையுமோ கொடுப்பேன். அந்நீல உமக்குச் சொல்றேனே..?” – என்றார் சரவணன். “நல்லது..” என்று கும்பிட்டுவிட்டு இடத்தைக் காலி செய்தார் வெங்கடாசலம். சரவணன் வண்டியைப் பூட்டினார். “டடக்... டடடக்...டக்...டடக்..” சீரற்ற, குண்டும் குழியுமான கிராமத்துச் சாலையில் பாரவண்டி சென்றது. சரவணன் பார வண்டியை வாகாய்க் களத்தில் நிறுத்தினார். நுகத்தடி தூக்கி மாடுகளை விடுவித்தார். “புஸ்... புஸ்... ஸென மூச்சு விட்டுத் தரையை மோப்பம் பார்த்து, ஆங்காங்கங்கே நீண்டு கிடந்த நுனிப்புல்களை நாக்கை நீட்டிச் சுழற்றி இழுத்துக் கடித்தது. வண்டியை முன் காலில் நிறுத்தினார். வண்டி மாடுகளை பிடித்து வந்து, புடைத்துக் கிளப்ப...