Posts

Showing posts from October, 2024

161. ரௌத்ரம் பழகு (தேன் சிட்டு தீபாவளி மலர் 2024)

Image
  161. ரௌத்ரம் பழகு  சிறுகதை ஜூனியர் தேஜ் (தேன் சிட்டு தீபாவளி மலர் 2024) அ ண்ணி உங்க அம்மா வந்திருக்காங்க ." சமையல்கட்டின் வாயிற்படியில் நின்று அறிவித்தாள் கௌசிகா.  "சம்மந்தியம்மா.." – என்று அம்மாவைப் பணிவாக அழைத்தபடிக் கைக்கூப்பினார் அண்ணியின் அம்மா. அம்மாவின் முகம் வழக்கம்போல இறுக்கமானதைக் கவனித்தாள் கௌசிகா. சூழ்நிலையின் இறுக்கத்தைத் தளர்த்த, இடையில் வந்து அண்ணியுடைய அம்மாவின் கையிலிருந்து, பூவும், பழங்களும் அடங்கிய நெகிழிப் பையை அம்மாவின் சார்பில் சிரித்த முகத்துடன் வாங்கிக் கொண்டுபோய், சுவாமி மாடத்தின்முன் வைத்தாள்.  'மாமியார் 'சுருக்' என எதாவது சொல்லி விடுவாளோ..!' என்று பயம் அப்பியிருந்தது அண்ணியின் முகத்தில்   "திடீர்னு இந்த நேரத்துல உங்கம்மா எதுக்கு வந்திருக்காங்க.?"- என்று கேட்டுவிட்டால் அதற்கு ஏதும் பதில் தன்னிடம் இல்லையே..? என்ற எண்ணம் நீள, அண்ணி சமையலறை வாயிற்படியின் அருகே நின்று ஒரு கையால் நிலைப்படியைத் தாங்கிய நிலையில், லேசாகத் தலையை எட்டிப் பார்த்தாள்.  *** வா ங்க என்று வாய் நிறைய அழைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஒர...

160 . சுயரசனை ( கொலுசு - அக்டோபர் 2024)

Image
  160. சுயரசனை (மனநலம் சார்ந்த சிறுகதை) -ஜூனியர்தேஜ் ( கொலுசு - அக்டோபர் 2024) ஆ ரவல்லி, அளவான ஒப்பனையோடு, தோளில் கைக்குழந்தையைத் சாய்த்துக்கொண்டு, கணவன் விமலாதித்தனைப் பின்தொடர்ந்து ‘பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள் விழா’ அரங்கினுள் நுழைந்தாள். பொறுமைதான் உன்றன் உடைமை! அதைப் போற்றலே கடமை பொறுமையாற் கழியும் நாளிலே புதுவன்மை சேருமுன் தோளிலே! பொறுமைதான் உன்றன் உடைமை! - என்று உரத்து ஒலித்தவன்தான், பாவேந்தர் பாரதிதாசனின் தாசன் விமலாதித்தன். யதார்த்த வாழ்வில் ஏட்டுச் சுரையாய் ஆகிப் போனது விமலாதித்தன் கற்ற கல்வி. அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் எல்லாம் விமலாதித்தனை ஆட்கொண்டன. ஒருக் கட்டத்தில் ஆரவல்லியின் மீது கடுஞ்சினமும், வருத்தமும் வளர்ந்து, ‘வெறுப்பாக’ உருமாறி, பொறுமை முற்றிலும் விட்டுப்போய், அவளை அறுத்துக் கட்ட முடிவு செய்தான். விவாகரத்துக்குகாக, அட்வகேட் மோகன சுந்தரத்திடம் சென்ற, கடந்த காலக் கருப்பு நாட்கள் விமலாதித்தனை குற்ற உணர்விற்கு உட்படுத்தின. குற்ற உணர்வில் புழுங்குவதை விட, பாரதிதாசன் சொல்வதைப் போல, ‘நல்லறிவை   நாளும்   உயர்த்தி   ...