Posts

Showing posts from November, 2024

163. தோழர் (தமிழ்ப் பல்லவி 2023))

Image
  தோழர் ( சிறுகதை ) ஜூனியர்தேஜ் (தமிழ்ப் பல்லவி 2023 கவிஞர் கார்முகிலோன் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை) “கௌ சிகா இல்லம் ‘பிஸி’யாக இருந்தது. “டொக்... டொக்... டொக்... டொக்......; தட்... தட்... தட்... தட்... தட்... தட்... தட்...; ச்ஸ்... ச்ஸ்... ச்ஸ்... ச்ஸ்... ச்ஸ்... ச்ஸ்....; ர்...ர்ர்...ர்ர்ர்... ர்...ர்ர்...ர்ர்ர்... ர்...ர்ர்...ர்ர்ர்........” ஆணி அடிப்பது; ‘சன்-மைக்கா’ ஒட்டிய பின், அதன் மேல் கையால் தட்டிப் படிமானம் பார்ப்பது; வட்ட வடிவிலானப் பட்டைச்-சீலையை, இயந்திரத்தில் பொறுத்திப் பல்வேறு கோணங்களில் அழுத்தங்கள்   கொடுத்துத் தேய்த்துத் தேய்த்து ஓரம் மழுக்குவது; வழுவழுப்பாக்குவது; மின் வாளால் அறுத்துத் துண்டிப்பது...; ட்ரில்லரால் துளை போடுவது...; இப்படிச் சத்தங்கள், தனித்தனியாகவோ, ஒன்றிணைந்தோ தொடர்ந்து மாடியிலிருந்து கேட்டுக் கொண்டேயிருந்தன.   ‘க ண்காணிக்க ஆட்கள் இல்லை!’, என்பதால், உட்கார்ந்துக்கொண்டுக் கதை பேசுவது; வெற்றிலை, புகையிலை, மாவா என எதையாவது மென்று கொண்டும் துப்பிக்கொண்டும் பொழுது போக்குவது; செல்போன் பேசிப் பொ...

162. ஆயக்கால் (தினமணி கதிர் (24.11.24)

Image
  ஆயக்கால் (சிறுகதை) ஜூனியர் தேஜ் கி ட்டத்தட்டப் பத்து ஆண்டுகளுக்கு முன் வியலூர் கிராமத்திலிருந்தப் பூர்வீக வீட்டை விற்றுவிட்டுச் சென்னையில் செட்டிலாகிவிட்டப் பாண்டுரங்கன், ஒரு கட்டத்தில் தன் அண்ணன் குழந்தைகளுக்குச் செய்யவேண்டியப் கடமைகளைச் செய்துவிட்டு, காஞ்சீபுரத்தில் ஒரு ஆன்மீக அறக்கட்டளையில் சேவை செய்துகொண்டிருக்கிறார். உலகம் பூராவும் கிளைப் பரப்பி நின்ற அந்த அறக்கட்டளையின் கும்பகோணம் கிளையில் உருவாகியிருந்த ஒரு சட்டச் சிக்கலுக்குப் பரிகாரம் காண அனுபவமிக்கப் பாண்டுரங்கனை அனுப்பியது தலைமை நிர்வாகம். கும்பகோணம் வந்த பாண்டுரங்கனுக்கு,அங்கிருந்து எட்டாவது கிலோமீட்டரில் இருக்கும் தன் பூர்வீக ஊரான வியலூருக்குச் சென்று வரவேண்டும் என்ற இயல்பான ஆசை எழுந்தது. ‘காமாட்சி-ஜோசியர்-தெரு ’ வில் இயங்கி வந்த அறக்கட்டளைக் கட்டடத்தில் தங்கியிருந்த பாண்டுரங்கன், கால் நடையாகப் புறப்பட்டுக், பாலக்கரை காவிரிப் பாலத்துக்கு மேற்கே, வடகரையில் பழைய நினைவுகளை அசைப்போட்டுக் கொண்டே நடந்தார். அப்பப்பா.. இந்தப் பத்து வருடங்களில்தான் எத்தனையெத்தனை மாற்றங்கள். అఅఅ அ ரசுக் கலைக் கல்லூரிக்குள் செல்லும், ரமணி ராமய்...