ஜனனி ஜெயம் நீ...! - ஜூனியர் தேஜ்
ஜனனி...! ஜெயம் நீ...!!
நாவல் சுருக்கம் –
.ஆட்டிசம் குறைபாட்டின் ஒரு வகையான "லிட்டில் ப்ரொஃபஸர் சிண்ட்ரோம்” அதாவது (சிறிய பேராசிரியர் குறைபாட்டால்) குழந்தைப் பருவத்திலேயே பாதிக்கப்பட்டவள் ஜனனி.
பற்பல சமுதாயக் குறுக்கீடுகளையும், இடையூறுகளையும், அழுத்தங்களையும், தடைகளையும் கடந்து, தியாகத் தாயின் வைராக்யத்தாலும், நேர்த்தியான வளர்ப்பு முறையாலும், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களின் சரியான வழிகாட்டுதல்களாலும், சில பல தூய நட்புகளாலும் மற்றும் எத்தனை எத்தனையோ நல்லுங்களின் பாசத்தாலும், நேசத்தாலும், உலகே போற்றும் வேளாண் விஞ்ஞானியாக உருவாகிறாள் ஜனனி.
எக்காலத்திலும் உயிர்வாழ அத்தியாவசியமான உணவுப் பயிர் குறித்து ஆராய்ச்சி செய்து, எந்த நாட்டிலும், எந்தச் சூழலிலும் குறைந்த நாட்களில் விளையும் வகையில் வீரிய ஒட்டு ரக நெற்பயிரை உற்பத்தி செய்து, அதை உலகுக்கு அர்ப்பணித்த ஜனனியை உலகமே போற்றிப் புகழ்ந்து விருதுகள் அளித்துக் கொண்டாடி மகிழ்ந்தன.
ஜனனிக்கு தொடக்கக் கல்வி அளித்த சிறுகுடி கிராமத்து அரசுப் பள்ளி வளாகத்தில் அரசுக் கல்வித்துறை பாராட்டு விழா நடத்திப் பெருமை கொள்கிறது.
இந்த நிகழ்ச்சிக்காக, பிரத்யேகமாக இசைக் கடல் வேலூர் ராம்குமார் எழுதி இசை அமைத்த ‘ஜனனீ ஜெயம் நீ...’ எனும் பாடல் விழா மேடையில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.
நிகழ்ச்சியை மீடியாக்கள் நேரடியாய் ஒளிபரப்ப, ‘ஜனனீ ஜெயம் நீ...’ என உலகெங்கும் காற்றோடு கலந்து ஒலித்துக் கொண்டிருந்தது...
மகிழ்ச்சியின் உச்சத்தில் அனிச்சையாக, ஜனனியின் உப்புக் கடல் பொங்கி, கன்னத்தில் வழிந்து ஓடியபோது, ‘உன்னான் முடியும் ஜனனி...!’ என்று நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆக்கமும் ஊக்கமும் உரமும் தந்து உயர்த்திய அனைத்து, நல்லுள்ளங்களுக்கும் தான் பெற்ற விருதினைச் மனதாரச் சமர்ப்பித்துத் தன் நன்றியறிதலைக் காணிக்கையாக்குகிறாள் ஜனனி.
ஜனனியின் ஆடிசக் குறைபாட்டை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, விஞ்ஞானிகள் எனும் போர்வையில் ஒளிந்து, அவளின் கண்டுபிடிப்புகளைத் திருட முயற்சித்த கயவர்களுக்கும், அவர்களுக்குத் துணை போன சுயநல, வழிகாட்டிகளின் நம்பிக்கை துரோகங்களையெல்லாம், அறிந்து, சாதுர்யமாக, அறிவியல் பூர்வமாக அவற்றையெல்லாம் முறியடித்து, ஜனனியின் வெற்றியை மட்டுமே இலக்காக வைத்து அவளுக்காகவே வாழ்ந்த ஆய்வு இணையர் Research Associate மார்த்தாண்டத்திற்கு, எதிர்பாராத, மிக உயர்ந்த பரிசு ஒன்றை அளித்து மகிழ்கிறாள் உலக விஞ்ஞானி ஜனனி. மார்த்தாண்டமும் அதற்கு ஈடான ஒரு பரிசை வழங்கி ஜனனியை மகிழ்ச்சியிலாழ்த்துகிறார்.
தன்னம்பிக்கையோடு உழைத்து உயர்ந்த ஜனனியின் கதையை வாசித்து கருத்திடுங்கள் வாசக நண்பர்களே.
1. ஜனனி – கதாநாயகி
2. ராஜேந்திரன் – ஜனனியின் தந்தை
3. வஸந்தா – ஜனனியின் தாய்
4. மார்த்தாண்டம் (ஜனனியின் Research Associate)
5. ம்ருணாளிணி (காதல் முறிவு ஏற்பட்டுவிட்ட, மார்த்தாண்டத்தின் முன்னாள் காதலி)
சார் தங்களின் ஜனனி ஜெயம் நீ நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்தேன் மனம் கனக்க வைத்து விட்டது
நாவலைப் பற்றி விமர்சனம் தர வார்த்தைகள் போதாது நீண்டதொரு விமர்சனமும் நாவலுக்கான அணிந்துரையும் விரைவில் எழுதி அனுப்புகிறேன்
கவி வெண்ணிலவன், மணிமேல் குடி




ஜனனி ஜெயம் நீ மக்கள் மனதை ஈர்த்த கதை
ReplyDelete