58. கேள்வி பதில் (ஜூனியர் தேஜ்)

58. கேள்வி பதில்

                                      -ஜூனியர் தேஜ்

கலையருவி (சிற்றிதழ்) மார்ச் 1997


கேள்வி பதில்

                                      -ஜூனியர் தேஜ்

கலையருவி (சிற்றிதழ்) மார்ச் 1997

*  கேள்வி :- ஹைகூ கவிதைபோல ஒரு ஹைக்கூ ஜோக்  ப்ளீஸ்..

க. ராமமூர்த்தி, சென்னை - 78

**  பதில்  :- ரிஷி’கேசம்’ இருப்பதெங்கே..?

              ஹி... ஹி...

             ‘ரிஷியின் தலையில்’                   

*****************************************************************************

கேள்வி :- பொன்விழா சுதந்திரம் கொண்டாடும் வேளையில் அரசியல்வதிகளால் (நம்) நாடு கண்டதென்ன?

மு.முத்து, முசிறி

* பதில்    :- சின்னத் திரைகளில் ‘பொன் (ரெய்டு) விழா மறு ஒளிபரப்புக் கூட செய்தார்களே....?பார்க்கவேயில்லையா..?

*****************************************************************************

*  கேள்வி :-ஜாதி வெறி', ‘மத வெறி' – விஷம் நிறைந்தது எது?

சாணக்யா, சேலம்

* பதில்    :- எரிகிற கொள்ளீல எந்தக் கொள்ளி நல்லக் கொள்ளி...?

 *****************************************************************************

*  கேள்வி :-நகைச்சுவை நதியே...! காதல் பற்றி தங்கள் கருத்து....

சிவா, சிவகாசி

* பதில்    :- காதல் ஒரு ‘ஜீவ நதி’, ட்ரிப்யூனலுக்கெல்லாம்’ அப்பாற்பட்டது.

 *****************************************************************************

*  கேள்வி :- நகைச்சுவை எழுத்தாளர்கள், நடிகர், நடிகைகளில் தங்களைக் கவர்ந்தவர்....

அ. ரம்யா, திருச்சி

* பதில்    :- பாக்கியம் ராமசாமி, குணச்சித்திர சிவாஜி கணேசன், நகைச்சுவை நாகேஷ், மனோரமா.

  *****************************************************************************

*  கேள்வி :-ஜூனியர் தேஜ்’? என்பதுதான் உங்கள் பெயரேவா?

ஆனந்த், உசிலை

* பதில்    :-தேஜ்’ என்பது என் தந்தையின் புனைப்பெயர். புண்யாகவசனம் செய்து, நெல் பரப்பி எழுதிய எனது பெயர்தான் காஞ்சீபுரம் பெருமாளுக்கும்..

  *****************************************************************************

*  கேள்வி :- காஷ்மீர் பிரச்சனை, காவிரிப் பிரச்சனை தீர வழி?

கே. பிரகாஷ், புதுக்கோட்டை

* பதில்    :- இந்தப் பிரச்சனைங்க தீர்ந்துட்டா அரசியல் நடத்தறது எப்படிங்க?

  *****************************************************************************

*  கேள்வி :- பணம் பாதாளம் வரை பாயும் என்றால் விதி எது வரை பாயும்?

பார்த்திபன், கரூர்

* பதில்    :- மதி விழித்துக்கொள்ளும் தூரம் வரை.

 *****************************************************************************

 *  கேள்வி :- தற்கால ஜோக்ஸ் குறித்து தங்கள் கருத்து?

க. சின்னதுரை, திருமங்கலம்

* பதில்    :- தரமான ஜோக்ஸ் தற்போது தாரளமாகவே வெளிவருகின்றன.

 *****************************************************************************

 *  கேள்வி :- டி என் சேஷன் அடுத்த ஜனாதிபதி ஆனால்...?

த. அமுதம், அல்லிநகரம்

* பதில்    :- ஜனாதிபதிக்கு உண்மையாக என்ன அதிகாரம் என்று கட்டாயம் தெரிந்துவிடும்.

*****************************************************************************

*  கேள்வி :- தமிழ் நாட்டிலிருந்து 39 எம் பிக்கள் பாராளுமன்றம் சென்றும், ‘வை கோ’ போல வாதாட ஒருவரும் இல்லையே எனும்போது என்ன தோன்றுகிறது?

எம். சின்னக்கனி, சித்தூர்

* பதில்    :-துருவன்’ கதைதான் நினைவுக்கு வருகிறது.

  *****************************************************************************

*  கேள்வி :- வயதுக்கு மீறி புத்தகங்களைச் சுமக்கும் குழந்தைகளைப் பற்றி...

நா. லோகநாதன், திருத்தக்கல்

 பதில்    :- பாவம்...பூ’வின் முதுகில் (த,ஆ,க,அ,(ச.அ) எனும் பஞ்ச பூதங்கள். 

*****************************************************************************



Comments

Post a Comment

Popular posts from this blog

மயூரி... என் உயிர் நீ... (கண்மணி 09.03.25) (முழு நீள நாவல்)

அடங்க மறு... !( முழு நாவல் (கண்மணி 23.07.25)

உலகளாவிய திறனாய்வுப் போட்டி 4 வது இடம்